LATEST NEWS
சோஃபா வந்தவுடன் சிலர் நம்மைவிட்டுப் போயிட்டாங்க.. போனவங்க போகட்டும் ஆனால்… சூசகமாக பேசிய உதயநிதி..!!
சென்னை அடுத்த திருவேற்காட்டில் இன்று (ஜூலை 5) நடைபெற்ற திமுக நிர்வாகி இல்லத் திருமண விழாவில், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது மணமக்களை வாழ்த்திப் பேசிய அவர், தமிழக அரசியல் சூழல் குறித்தும், திமுகவின் கொள்கை உறுதிகள் குறித்தும் சில முக்கியக் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்.
அவரது உரையின் போது, “சோஃபா வந்தவுடன் சிலர் நம்மைவிட்டுச் சென்றுவிட்டார்கள். ஆனால், ‘திமுகவுடன் இருப்போம்’ என்று உறுதியளித்த இஸ்லாமியப் பெருமக்கள் இன்றும் நம்முடனேயே, திமுகவுடனேயே தொடர்ந்து பயணித்து வருகிறார்கள்” என்று குறிப்பிட்டுப் பேசினார்.
மேலும் பேசிய அவர், திமுகவுக்கும் இஸ்லாமிய சமூகத்திற்கும் இடையே இருக்கும் பந்தம் மிகவும் ஆழமானது என்றும், இந்தத் தொப்புள்கொடி உறவை யார் நினைத்தாலும் எப்போதும் பிரிக்க முடியாது என்றும் ஆணித்தரமாகத் தெரிவித்தார்.
