LATEST NEWS
“இப்போது எல்லாம் முடிந்துவிட்டது..!” நான் போகிறேன்… ஒய்வு குறித்து மைதானத்திலேயே கண்ணீர் விட்டு அழுது சர்வதேச கால்பந்து வீரர் நெய்மர்.. வைரலாகும் நெகிழ்ச்சி வீடியோ..!!
கண்ணீர் விட்டபடி மிகுந்த மனவேதனையுடன் பேசிய நெய்மர், “நான் எனது முழு முயற்சியையும் செய்தேன்; ஆனால் இப்போது எல்லாம் முடிந்துவிட்டது. நான் எங்கே எனது சர்வதேசப் பயணத்தைத் தொடங்கினேனோ, அங்கேயே அதனை முடித்துக் கொள்கிறேன்” என்று மிகவும் உருக்கமாகத் தனது ஓய்வு முடிவை வெளிப்படுத்தியுள்ளார். கடந்த 2010ஆம் ஆண்டு பிரேசில் தேசிய அணியில் அறிமுகமான நெய்மர், நியூ ஜெர்சியில் உள்ள இதே மெட்லைஃப் மைதானத்தில்தான் தனது முதல் சர்வதேசப் போட்டியை விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.
https://www.instagram.com/reel/DabffaaxVJu/?utm_source=ig_web_button_share_sheet
தனது 16 ஆண்டுகால புகழ்பெற்ற சர்வதேச கால்பந்து வாழ்க்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள 34 வயது நெய்மர், பிரேசில் அணிக்காகப் பல்வேறு சாதனைகளைப் படைத்துள்ளார். அவர் பிரேசில் தேசிய அணிக்காக மொத்தம் 129 சர்வதேசப் போட்டிகளில் விளையாடி 80 கோல்களை அடித்து, அந்த நாட்டின் வரலாற்றிலேயே ‘அதிக கோல் அடித்த வீரர்’ (All-time Leading Goalscorer) என்ற அசைக்க முடியாத வரலாற்றுச் சாதனையைத் தன் வசம் வைத்துள்ளார். பிரேசில் கால்பந்து வரலாற்றின் மிகச்சிறந்த வீரர்களில் ஒருவரான நெய்மரின் இந்தத் திடீர் ஓய்வு அறிவிப்பு, உலகெங்கிலும் உள்ள கால்பந்து ரசிகர்களை மெய்சிலிர்க்கவும் சோகத்தில் ஆழ்த்தவும் செய்துள்ளது.
