CRIME
“தாலியின் ஈரம் கூட காயல” பார்ட்டி கொடுத்த சில மணி நேரங்களில் கொடூர மரணம் புதுப்பெண் கொலையா..? தற்கொலையா..? வெளியான அதிர்ச்சித் தகவல்..!!
டெல்லியில் கடந்த ஏப்ரல் 24 அன்று திருமணம் செய்துகொண்ட 28 வயதான ஆகிருதி சுதார் என்ற இளம் பெண், சனிக்கிழமை மாலை லோதி காலனியில் உள்ள ஒரு குடியிருப்பு வளாகத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். விடுப்பில் இருந்த ஆகிருதி, அன்றைய தினம் தான் மீண்டும் பணிக்குத் திரும்பியுள்ளார். அவர் கட்டிடத்திலிருந்து கீழே விழுந்து இறந்திருக்கலாம் என்று கருதப்படும் நிலையில், இது தற்கொலை அல்ல, கொலை தான் என்று அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
அன்றைய தினம் அவர் அலுவலகத்தில் தனது சக ஊழியர்களுக்கு ஒரு சிறிய விருந்து வைத்துள்ளார் என்றும், மாலை 6 மணியளவில் தனது தாயாரிடம் மிகவும் இயல்பாகப் பேசிவிட்டு வீட்டிற்குப் புறப்பட்டதாகவும் அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். மன ரீதியாக மிகவும் வலிமையான அவர் தற்கொலை செய்துகொள்ளும் வாய்ப்பே இல்லை என்றும், மன அழுத்தத்திற்கான எந்த அறிகுறிகளும் அவரிடம் இல்லை என்றும் அவர்கள் வாதிடுகின்றனர். ஆனால், அவர் காணாமல் போய்விட்டதாக இரவு 8 மணிக்கு அவரது கணவர் கூற, 9 மணி அளவில் அவர் பிணமாக மீட்கப்பட்டுள்ளார்.
ஆகிருதிக்கும் அவரது கணவர் அரசுது சிக்கா என்பவருக்கும் இடையே 8 வருடங்களாகக் காதல் இருந்த பின்னரே திருமணம் நடந்துள்ளது. தற்போது வேலையில்லாமல் இருக்கும் அவரது கணவரும், அவரது குடும்பத்தினரும் திருமணத்திற்குப் பிறகு ஆகிருதியை 20 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டுத் தொடர்ந்து துன்புறுத்தி, மிரட்டி வந்துள்ளதாக அவரது குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். மரணத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு கூட அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து காவல்துறையினர் அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
