LATEST NEWS
தேர்தல் வழக்கில் சிக்கிய CM விஜய்..! 3 வாரங்களில் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி நோட்டீஸ்..!!
தமிழ்நாடு முதல்வர் விஜய்க்கு எதிராகத் தொடரப்பட்ட தேர்தல் வழக்குகளில் சென்னை உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் நடைபெற்ற தேர்தல் வழக்குகள் தொடர்பாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கடந்த 2026 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில், அவர் இவ்விரு தொகுதிகளிலும் தாக்கல் செய்த வேட்புமனுக்களில் வேறுபாடுகள் இருப்பதாகக் கூறி வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. மேலும், அவரது வெற்றியைச் செல்லாது என்று அறிவிக்கக் கோரியும் இந்த மனுக்கள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.
இந்தத் தேர்தல் வழக்குகளை விசாரித்த நீதிமன்றம், மனுக்களில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்த பின்னர், இது குறித்து 3 வாரத்திற்குள் பதில் அளிக்குமாறு உத்தரவிட்டுள்ளது.
