LATEST NEWS
BREAKING: லுக் அவுட் நோட்டீஸ்..! சென்னை ஐகோர்ட்டில் செந்தில் பாலாஜி திடீர் முன்பிணை மனு தாக்கல்..!!
திமுக முன்னாள் அமைச்சரான செந்தில் பாலாஜி, சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
ஊத்தங்கரை தொகுதி தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரிடம் பேசியதாகத் தொடரப்பட்ட வழக்கு ஒன்றில் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டப்பட்டுள்ளார். இந்த வழக்கின் காரணமாக, அவர் தனது சகோதரர் அசோக்குமாருடன் தற்போது தலைமறைவாக உள்ளார்.
தலைமறைவாக இருக்கும் செந்தில் பாலாஜி மற்றும் அவரது சகோதரர் இருவரும் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லாதவாறு தடுப்பதற்காக லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர்களைக் கைது செய்யப் போலீசார் தீவிரமாக நடவடிக்கை எடுத்து வரும் இந்நிலையில்தான், அவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்பிணை கோரி மனு தாக்கல் செய்துள்ளார்.
