LATEST NEWS
சொந்தத் தம்பியின் குடும்பத்தையே உருட்டுகட்டையால் அடிச்சபோ.. உங்க மதம் கற்றுக்கொடுத்த அன்பு எங்கே போச்சு.? அமைச்சர் மரிய வில்சனை கிழித்தெடுத்த சீமான்..!!
சட்டமன்ற நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தின் போது, தமிழ் மொழி குறித்துப் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நிதித்துறை அமைச்சர் என். மரிய வில்சனுக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடுமையான கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். “சொந்தத் தம்பியின் குடும்பத்தையே உருட்டுகட்டையால் தாக்கியபோது வெளிப்பட்டதா உங்கள் மதம் கற்றுக்கொடுத்த அன்பு?” எனக் கேள்வி எழுப்பி, அமைச்சரின் பேச்சுக்குச் சீமான் காரசாரமாகப் பதிலடி கொடுத்துள்ளார்.
சட்டமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் மரிய வில்சன், “நான் கிறிஸ்தவனாகப் பிறந்தவன்; என் மதம் எனக்கு அன்பைக் கற்றுத் தந்துள்ளது, ஆனால் தமிழ் எனக்கு அன்பைக் கற்றுத் தரவில்லை” என்று கூறியதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது. தமிழ் மொழியின் தொன்மையையும் தமிழர்களின் அடையாளத்தையும் கொச்சைப்படுத்தும் வகையில் அமைந்த அமைச்சரின் இந்தப் பேச்சு, அரசியல் வட்டாரத்திலும் தமிழ் ஆர்வலர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரம் குறித்துக் காட்டமான அறிக்கை வெளியிட்டுள்ள சீமான், “அன்பின் வடிவமாகத் திகழும் தாய்மொழியான தமிழை இழிவுபடுத்தும் உரிமை யாருக்கும் கிடையாது. சொந்தத் தம்பியின் வீட்டிற்குள் புகுந்து தாக்குதல் நடத்திய சம்பவத்திலேயே உங்கள் அன்பு லட்சணம் வெளிப்பட்டுவிட்டது” என்று கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், கிறிஸ்தவத்தையும் தமிழ் மொழியையும் பிரித்துப் பார்க்கும் அமைச்சரின் அறியாமையைச் சுட்டிக்காட்டிய அவர், வீரமாமுனிவர் மற்றும் ஜி.யு. போப் போன்ற மேலைநாட்டு அறிஞர்கள் தமிழின் அன்பையும் பெருமையையும் உலகுக்கு உணர்த்திய வரலாற்றை அமைச்சர் நினைவுகூர வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார். அத்துடன், தாய்மொழியை அவமதித்துப் பேசியதற்காக அமைச்சர் மரிய வில்சன் சட்டமன்றத்தில் உடனடியாகப் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
