LATEST NEWS
ஆஹா செம பிளான்..! முன்னாள் தலைவர்களின் ஃபார்முலா.. இறங்கி அடித்த விஜய்… சுதந்திர தின உரையில் வெடிக்கப்போகும் அதிரடி அறிவிப்புகள்..!!
தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்ற பின்னர், முதன்முறையாகச் வரவிருக்கும் சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியேற்றி உரையாற்றவுள்ள விஜய் அவர்களுக்கான உரை தயாரிப்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. முதல்வர் விஜய்யின் இந்த கன்னிச் சுதந்திர தின உரை குறித்து அரசியல் களத்திலும் பொதுமக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. குறிப்பாக, நடந்து முடிந்த பட்ஜெட்டில் பெரிய அளவிலான புதிய திட்டங்களோ அறிவிப்புகளோ இடம்பெறாத நிலையில், இந்தச் சுதந்திர தின உரையின் மூலம் மிக முக்கிய அதிரடி அறிவிப்புகள் வெளியாகும் என பரவலாக எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்வரின் உயர்மட்ட ஆலோசகர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகளின் ஒருங்கிணைப்பில் முதற்கட்ட உரை வரைவு தயார் செய்யப்பட்டது. அதை கவனமாக ஆய்வு செய்த முதல்வர் விஜய், உரையை மேலும் செழுமைப்படுத்தும் வகையில் சில முக்கிய மாற்றங்களையும் ஆலோசனைகளையும் வழங்கியுள்ளார். அதைத்தொடர்ந்து, உரையை இறுதி செய்யும் பணிகள் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. தனது உரை மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதில் முதல்வர் உறுதியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்த உரையை மிகவும் தனித்துவமாக மாற்றும் நோக்கில், தமிழகத்தை இதற்கு முன்பு ஆட்சி செய்த மறைந்த முன்னாள் முதல்வர்கள் மற்றும் மூத்த தலைவர்களின் வரலாற்றுச் சிறப்புமிக்க சுதந்திர தின உரைகள் தீவிரமாக ஆய்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் இடம்பெற்ற முக்கியமான கருத்துக்கள் மற்றும் தொலைநோக்கு பார்வைகளைச் சேகரித்து, தற்போதைய சூழலுக்கு ஏற்ப இந்த உரையில் சுவாரஸ்யமான தகவல்கள் சேர்க்கப்பட்டு வருகின்றன. பட்ஜெட் தொடர்பான ஏமாற்றங்களை ஈடுசெய்யும் வகையில், தமிழக மக்களுக்குப் புதிய நம்பிக்கையையும் பெரிய அறிவிப்புகளையும் வழங்கும் வகையில் இந்த உரை அமையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
