LATEST NEWS
“மூலையில் முடக்கப்பட்ட மிருகம்” உக்ரைன் அதிபர் புடின் எடுக்கும் ஆபத்தான முடிவு.. 3-வது உலகப்போர் வெடிக்கும் என பகீர் எச்சரிக்கை…!!
உக்ரைன் போரில் சந்தித்து வரும் கடுமையான பின்னடைவுகள், நாட்டின் நிதிச் சிக்கல்கள் மற்றும் உள்நாட்டில் குறைந்து வரும் ஆதரவு போன்ற அழுத்தங்களால், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் ‘மூலையில் முடக்கப்பட்ட மிருகம்’ போன்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச பாதுகாப்பு வல்லுநர்களும் பிரிட்டன் ஊடகங்களும் எச்சரித்துள்ளன. இதன் விளைவாக, நேட்டோ படைகள் மீது நேரடித் தாக்குதல்களை நடத்தி, உலகை 3-வது உலகப்போரை நோக்கித் தள்ளும் ஆபத்து நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
நீண்டகாலமாக நடைபெற்று வரும் உக்ரைன் போரினால் பல்லாயிரக்கணக்கான ரஷ்ய வீரர்கள் உயிரிழந்துள்ள நிலையில், போருக்கான பிரம்மாண்ட செலவினங்களாலும் மேற்கத்திய நாடுகளின் பொருளாதாரத் தடைகளாலும் நாட்டின் நிதி ஆதாரங்கள் வேகமாகச் சரிந்து வருகின்றன. மற்றொருபுறம், ரஷ்ய மக்கள் மற்றும் அரசியல் அதிகார மையங்களிடையே புடினுக்கான ஆதரவு பலவீனமடைந்து வருவதால், தனது ஆட்சியையும் அதிகாரத்தையும் காப்பாற்றிக்கொள்ள அவர் எந்த எல்லைக்கும் செல்லக்கூடும் என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.
நேட்டோ உறுப்பு நாடுகளின் எல்லைகளில் சிறிய அளவிலான ஊடுருவல்களை மேற்கொள்வது அல்லது மிகக் கடுமையான இணையவழித் தாக்குதல்களை நடத்துவதன் மூலம், நேட்டோ கூட்டணியின் எதிர்வினை ஆற்றலையும் அதன் ஒற்றுமையையும் சோதிக்க ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க மற்றும் பிரிட்டன் உளவு அமைப்புகள் எச்சரிக்கின்றன. புடினின் இத்தகைய துணிச்சலான நகர்வுகள் நேட்டோவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே நேரடி ராணுவ மோதலை ஏற்படுத்தி, அது முழு அளவிலான உலகப்போராக உருவெடுக்கும் என்ற அச்சம் ஐரோப்பிய நாடுகளிடையே நிலவுகிறது.
தொடர்ச்சியாகப் போரின் தீவிரத்தை அதிகரித்து வரும் அதிபர் புடின், உலக அமைதிக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக மேற்கத்திய பாதுகாப்பு நிபுணர்கள் குற்றம்சாட்டுகின்றனர். சர்வதேச அளவில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள இந்தச் சூழலில், ரஷ்யாவின் எந்தவொரு சாத்தியமான அத்துமீறலையும் உடனடியாக எதிர்கொள்ளும் வகையில், நேட்டோ அமைப்பும் அதன் எல்லையோரப் பகுதிகளில் ராணுவப் பாதுகாப்பைப் பல மடங்கு பலப்படுத்தி வருகிறது.
