LATEST NEWS
கலாச்சாரமா? கொடூரமா?ஐந்து வயதிலேயே பிறப்புறுப்பை தையல் போடும் சடங்கு! நெஞ்சை பதறவைக்கும் உலக அவலம்..!
உலகம் முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் பல்வேறு வடிவங்களில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கின்றன. அதில் மிகவும் அதிர்ச்சியளிக்கக்கூடிய ஒன்றுதான் ஆப்பிரிக்க நாடுகளில், குறிப்பாக காம்பியாவில் நடைபெறும் பெண் பிறப்புறுப்பு சிதைப்பு எனும் பழக்கமாகும். உலகளவில் கோடிக்கணக்கான பெண்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், காம்பியாவில் பெரும்பான்மையான சிறுமிகள் ஐந்து வயதிற்கு முன்பே இந்தச் சித்திரவதைக்கு ஆளாகின்றனர். சிறுமிகளின் பிறப்புறுப்பை அறுத்து மூடும் இந்த மனிதாபிமானமற்ற செயலால் அதிகப்படியான இரத்தப்போக்கு, கொடிய நோய்த்தொற்றுகள், குழந்தை பேறின்மை, பிரசவக் கால சிக்கல்கள் மற்றும் உயிரிழப்பு போன்ற பல பயங்கரமான உடல்நலப் பாதிப்புகளைப் பெண்கள் வாழ்நாள் முழுவதும் சந்திக்க நேரிடுகிறது.
இவ்வளவு கொடிய நடைமுறையாக இருந்தாலும், இது கலாச்சாரம் மற்றும் மத சுதந்திரத்தின் ஒரு அங்கம் என சில பழமைவாதிகளால் இன்றும் நியாயப்படுத்தப்படுகிறது. பெண்களின் உணர்வுகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் செயல்படும் இவர்கள், இக்கொடுமைக்கு எதிரான தடையை நீக்கக் கோரி காம்பியா உச்ச நீதிமன்றம் மற்றும் நாடாளுமன்றம் வரை சென்றனர். இருப்பினும், செயற்கை நுண்ணறிவு கோலோச்சும் இந்த நவீன யுகத்தில், மனித உரிமைகளுக்கான குரல்களே இறுதியில் வென்றுள்ளன. சமீபத்திய நாடாளுமன்ற வாக்கெடுப்பில், பெண்களுக்கு இழைக்கப்படும் இந்தத் தீங்கான பழக்கத்தை ஒழிப்பதில் அரசு தனது உறுதியான நிலைப்பாட்டை நிரூபித்து, தடைச்சட்டத்தை வெற்றிகரமாகத் தக்கவைத்துள்ளது. இருண்ட நம்பிக்கைகளுக்கு மத்தியில், சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பெண்களின் அடிப்படை உரிமைகளை மீட்டெடுப்பதற்கான ஒரு மாபெரும் வெற்றியாகவே இது பார்க்கப்படுகிறது.
