தூத்துக்குடி:”தண்ணீர் எடுக்கச் சென்றபோது நேர்ந்த விபரீதம்… தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாப பலி..!!” – cinefeeds
Connect with us

DISTRICT NEWS

தூத்துக்குடி:”தண்ணீர் எடுக்கச் சென்றபோது நேர்ந்த விபரீதம்… தோட்டத்தில் உள்ள கிணற்றில் தவறி விழுந்து தொழிலாளி பரிதாப பலி..!!”

Published

on

தூத்துக்குடி அருகே உள்ள கீழ தட்டப்பாறை பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான சுப்பையா என்பவர், அதே பகுதியில் பெங்களூரைச் சேர்ந்த ராஜன் என்பவருக்குச் சொந்தமான தோட்டத்தில் கரிமூட்டம் போடும் பணியில் ஈடுபட்டு வந்தார். இவருடன் சக்தி மற்றும் முனியசாமி ஆகிய இரு தொழிலாளர்களும் இணைந்து இந்த வேலையைச் செய்து வந்தனர்.

கரி தயாரிப்பதற்காக எரியும் நெருப்பில் ஊற்றுவதற்கு, தோட்டத்தில் இருந்த கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்க சுப்பையா சென்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவர் நிலைதடுமாறி கிணற்றிற்குள் தவறி விழுந்துள்ளார். இதைப் பார்த்த அருகில் இருந்த சக தொழிலாளர்கள் அவரை உடனடியாக மீட்க முயன்றும், அவர்களது முயற்சி பலனளிக்கவில்லை.

Advertisement

துரதிர்ஷ்டவசமாக கிணற்றுத் தண்ணீரில் மூழ்கிய சுப்பையா அங்கேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சோகமான சம்பவம் குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதை அடுத்து, சிப்காட் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in