DISTRICT NEWS
“காசா? ஜனமா? எனக்கு என் ஜனம் தான் முக்கியம்” – மேடையில் உருகிய CM விஜய்.. கரூரில் பரபரப்பு..!
கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு கூட்டத்தில் உரையாற்றிய முதலமைச்சர் விஜய், கடந்த காலத்தில் அங்கு நடந்த ஒரு துயர சம்பவத்தையும் அதனால் ஏற்பட்ட ஆறாத வடுவையும் உருக்கமாக நினைவுகூர்ந்தார். காவல்துறை கூட்ட நெரிசலை சரியாக கையாளாமல் நாடகம் ஆடியதாக குற்றம் சாட்டிய அவர், தனது படத்தின் மீது அதீத அன்பு கொண்ட உயிர்களை இழந்த வலியால் தான் வீட்டிற்குள் முடங்கியதை விமர்சகர்கள் தவறாக சித்தரித்ததாக வேதனை தெரிவித்தார். குறிப்பாக, தன் மீது பழிபோட்டு சட்டசபையில் அரசியல் செய்த மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரின் ஏளனமான பேச்சுகளுக்கு அவர் தனது கடும் கண்டனத்தை பதிவு செய்தார்.
தனக்கு ஏற்பட்ட இந்த வலிகளுக்கும், தன்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் 2026 தேர்தலில் மாபெரும் வெற்றியை அளித்து மக்கள் தகுந்த பதிலடி கொடுத்துவிட்டதாக விஜய் பெருமிதம் தெரிவித்தார். மக்களின் இந்த பேரன்பிற்கும் ஆதரவிற்கும் நன்றி கடன் செலுத்தும் நோக்கத்திலேயே தான் அரசியலுக்கு வந்ததாகக் கூறிய அவர், தனக்கு பணத்தை விட தன் மக்களே என்றென்றும் முக்கியம் என ஆணித்தரமாக தெரிவித்தார். கட்சி நிதி குறித்து கேள்வி எழுப்பியபோது எதிர்க்கட்சியினர் பதிலளிக்க முடியாமல் திணறியதை சுட்டிக்காட்டிய முதலமைச்சர், தற்போதைய ஆட்சியில் அரசு அலுவலகங்களில் ஊழல் முழுமையாக ஒழிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு உரிய மரியாதையுடன் சேவைகள் வழங்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
