LATEST NEWS
பூங்காவில் மரண பயம்..! ஓட முடியாமல் தவித்த முதியவர்.. 8 அடி உயரத்திற்கு தூக்கி வீசிய பைசன்… பதறவைக்கும் காட்சி..!!!
அமெரிக்காவின் புகழ்பெற்ற எல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் ஒரு காட்டு பைசன் முதியவர் ஒருவரை ஆக்ரோஷமாகத் தாக்கி, காற்றில் 8 அடி உயரத்திற்குத் தூக்கி வீசிய அதிர்ச்சிகரமான சம்பவம் நடந்துள்ளது. தனது பேரனுடன் பூங்காவிற்குச் சென்றிருந்த அந்த முதியவர், தற்போது பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த கொடூரமான தாக்குதல் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி தற்போது வைரலாகி வருகிறது.
வெள்ளிக்கிழமை மாலை பூங்காவின் பிரிட்ஜ் பே கேம்ப்கிரவுண்ட் பகுதியில் இந்த விபத்து நேர்ந்துள்ளது. சம்பவம் நடப்பதற்கு முன்னரே அந்த பைசன் மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டதாகவும், அங்கு சென்ற வாகனங்களையும் மக்களையும் அச்சுறுத்தும் வகையில் ஓடியதாகவும் நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். ஆபத்தை உணர்ந்த முதியவரும் அவரது பேரனும் பைசனிடமிருந்து சுமார் 100 கெஜம் தொலைவில் பாதுகாப்பாக நின்று கொண்டிருந்தனர். இது பூங்கா நிர்வாகம் அறிவுறுத்திய பாதுகாப்பான தூரத்தை விடவும் அதிகமாகும்.
ஆனால், திடீரென அந்தப் பகுதி வழியாகச் சென்ற ஒரு வெள்ளை நிற பிக்கப் டிரக்கைக் கண்டு மேலும் ஆத்திரமடைந்த பைசன், முதியவரும் அவரது பேரனும் மறைந்திருந்த மரங்களை நோக்கி பாய்ந்து வந்தது. ஆபத்தை உணர்ந்து பேரன் தப்பியோடிய நிலையில், முதியவரால் வேகமாக ஓட முடியாமல் போனது. அவரைத் துரத்திய பைசன், தனது கூர்மையான கொம்புகளால் அவரை முட்டி 8 அடி உயரத்திற்கு காற்றில் தூக்கி வீசியது. பூங்கா மீட்புக் குழுவினர் அவரை மீட்டு உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். பைசன்களின் நடத்தை கணிக்க முடியாதது என்பதால், சுற்றுலாப் பயணிகள் எப்போதும் காட்டு விலங்குகளிடம் இருந்து எச்சரிக்கையுடனும் பாதுகாப்பான தூரத்திலும் இருக்க வேண்டும் என்று பூங்கா நிர்வாகம் மீண்டும் அறிவுறுத்தியுள்ளது.
