LATEST NEWS
“ஊழல்வாதிகளோடு எப்படி ஊழலை ஒழிப்பீங்க?”.. முதல்வர் விஜயை வெளுத்து வாங்கிய பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன்.. அரசியலில் திடீர் பரபாபு..!!
தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் பேசிய மூத்த பத்திரிகையாளர் கோட்டீஸ்வரன், முதல்வர் விஜயின் ஊழல் எதிர்ப்பு அரசியல் நிலைப்பாடு பெரும் கேள்விக்குறியாக இருப்பதாகக் கடுமையாக விமர்சித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்ட சர்ச்சைக்குரிய முன்னாள் அமைச்சர்கள் மற்றும் அரசியல் பிரமுகர்களைச் சட்டத்தின் முன் நிறுத்துவதற்குப் பதிலாக, அவர்களுக்குச் சால்வை அணிவித்துத் தனது கட்சியில் இணைத்துக் கொண்டு ஊழல் ஒழிப்பு குறித்துப் பேசுவது அப்பட்டமான அரசியல் முரண்பாடு என்றும், இது விஜயின் ஊழல் எதிர்ப்பு முழக்கத்தையே கேலிக்கூத்தாக்கி அவரது அரசியல் நம்பகத்தன்மையைப் பாதிப்பதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார். சொந்தக் கட்சியில் உள்ளவர்களை வளர்க்காமல், வெளியிலிருந்து வந்த இத்தகைய நபர்களை நம்பி எப்படி ஊழலற்ற ஆட்சியைத் தர முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஐந்து சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஒத்திவைக்கப்பட்டிருப்பது தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் திட்டங்களுக்குப் பின்னடைவாக அமைந்துள்ளது என்று கூறியுள்ள அவர், தேர்தல் நடந்திருந்தால் “திமுகவும் அதிமுகவும் இணைந்து சதி செய்கின்றன” என்ற அனுதாப அலையை மக்களிடம் உருவாக்க தவெக திட்டமிட்டிருந்ததாகவும், தற்போது அந்த வியூகம் பலனின்றி போய்விட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தவெக அரசை கவிழ்க்கும் வலிமையில் எந்த எதிர்க்கட்சியும் இல்லை என்று சுட்டிக்காட்டிய அவர், மு.க.ஸ்டாலின் உடல்நலக் குறைவால் வெளிநாட்டில் இருப்பதால் திமுக தனது உள்கட்சி சவால்களிலும், அதிமுக தனது ஐடி விங் அதிருப்தி உள்ளிட்ட அமைப்பு பலவீனங்களிலும் கவனம் செலுத்தி வருவதாகவும், நாம் தமிழர் மற்றும் மதிமுக ஆகிய கட்சிகளும் தற்போதைய நிலையில் ஆட்சியை அசைக்கும் சூழலில் இல்லை என்றும் கூறியுள்ளார். இத்தகைய சூழலில், தவெக தேவையற்ற அச்சத்தை வெளிப்படுத்தி வருவதாக அவர் விமர்சித்துள்ளார்.
