LATEST NEWS
தளர்ந்த நடை… தளராத மனஉறுதி..! வாழ்க்கைப் பாடம் கற்பிக்கும் முதியவர்… இணையவாசிகளின் இதயங்களைத் தொட்ட…. வயதான செக்யூரிட்டி கார்டின் வைரல் வீடியோ..!!
ஓய்வு பெற வேண்டிய வயதைக் கடந்த பிறகும் செக்யூரிட்டி கார்டாக வேலை செய்யும் ஒரு வயதான பெரியவரின் வீடியோ இணையத்தில் வைரலாகி, பலரின் இதயங்களைத் தொட்டு சிந்திக்க வைத்துள்ளது. வாழ்க்கையில் சிறு சிறு பிரச்சினைகளுக்கெல்லாம் நாம் தொடர்ந்து புகார் கூறிக்கொண்டே இருக்க வேண்டுமா என்ற கேள்வியை எழுப்பும் வகையில், எவ்வித புகாரோ அல்லது சாக்குப்போக்கோ இன்றி தன் கடமையைச் செய்யும் இந்த பெரியவரின் அமைதியான உழைப்பு இணையவாசிகளின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் ‘நீல்பிரியா’ என்ற பயனர் பகிர்ந்துள்ள இந்த வீடியோவில், தளர்ந்த நடை மற்றும் கூன் விழுந்த முதுகுடன் இருந்தாலும், பெரியவர் ஒருவர் தன் கையில் பதிவேட்டை ஏந்திக்கொண்டு மிகுந்த அர்ப்பணிப்புடன் பாதுகாப்பாளராகப் பணியாற்றுவதைக் காண முடிகிறது. அன்று தனது நாள் மிகவும் மோசமாக அமைந்ததாகக் குறிப்பிட்ட அந்தப் பெண், இந்த வயதிலும் எவ்வித புகாருமின்றி முழு மரியாதையுடனும் அர்ப்பணிப்புடனும் உழைக்கும் இந்த பெரியவரைப் பார்த்த பிறகு, தனக்கு மீண்டும் புது நம்பிக்கையும் ஊக்கமும் கிடைத்ததாகத் தெரிவித்துள்ளார். சூழ்நிலைகள் வயதைப் பார்ப்பதில்லை என்பதையும், உண்மையான உழைப்பிற்கு ஓய்வு வயது என்று எதுவும் இல்லை என்பதையும் இந்த நிகழ்வு உணர்த்துகிறது.
https://www.instagram.com/reel/DbfoPOpxYmw/?utm_source=ig_web_button_share_sheet
இணையவாசிகளிடையே பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த வீடியோவைக் கண்டு பலரும் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர். இந்த வயதிலும் பெற்றோரை வேலை செய்ய வைக்கும் பிள்ளைகள் குறித்த ஆதங்கம் ஒருபுறமிருக்க, இந்த வயதான பெரியவரின் மீது நம்பிக்கை வைத்து அவருக்கு வேலை வாய்ப்பளித்த பாதுகாப்பு ஏஜென்சியைப் பலரும் பாராட்டி வருகின்றனர். எதுஎவ்வாறாயினும், எவ்விதக் குறையும் கூறாமல் நேர்மையாகவும் கௌரவமாகவும் உழைக்கும் அந்தப் பெரியவரின் அர்ப்பணிப்பு பலருக்கும் வாழ்க்கைப் பாடமாக அமைந்துள்ளது.
