LATEST NEWS
அடேங்கப்பா… 24 அரியர் வைத்திருந்த மாணவன்… இன்று நாட்டின் கெத்தான IPS அதிகாரி..! அரியர்களை முடித்து UPSC வென்ற சமீர் சர்மாவின் மாஸ் ஸ்டோரி..!!
கல்லூரியில் 24 பாடங்களில் தோல்வியடைந்த சமீர் சர்மா, அதிலிருந்து மீண்டு வந்து ஐ.பி.எஸ் அதிகாரியாக மாறிய கதை அனைவரையும் வியப்பில் ஆழ்த்தக்கூடிய ஒன்றாகும். தொடர்ச்சியான அரியர்களால் அவரது வாழ்க்கையே கேள்விக்குறியான நிலைக்குத் தள்ளப்பட்டபோதிலும், அவர் சோர்ந்து போகாமல் ஒரு உறுதியான முடிவை எடுத்தார். தனது இலக்கை அடைவதற்காக அடுத்த 18 மாதங்களை முழுமையாக அர்ப்பணித்து, தீவிரமாகப் படிக்கத் தொடங்கினார்.
அவரது விடாமுயற்சியின் பயனாக, முதலில் நிலுவையில் இருந்த அனைத்து அரியர்களையும் படித்து முடித்துத் தேர்ச்சி பெற்றார். அதைத் தொடர்ந்து, இந்தியாவின் மிகக் கடினமான UPSC தேர்விலும் வெற்றி பெற்று IPS அதிகாரியாக உயர்ந்து சாதனை படைத்தார். எந்தவொரு விஷயத்தையும் ஒரே நாளில் பெர்ஃபெக்ட்டாகச் செய்வதை விட, அதைத் தொடர்ச்சியாகச் செய்து கொண்டே இருப்பதே வெற்றிக்கு மிக முக்கியம் என்று அவர் தனது அனுபவத்தின் மூலம் அறிவுறுத்துகிறார்.
