LATEST NEWS
நெஞ்சை உலுக்கும் விபத்து..! நடுவானில் திடீர் கரும்புகை… ஓடுபாதையை விட்டு விலகி கார்கள் மீது சரக்கு விமானம் மோதல்… 5 பேர் உடல் கருகி பலி..!!
மியாமி சர்வதேச விமான நிலையத்தில் அமேசான் நிறுவனத்தின் ‘பிரைம் ஏர்’ சரக்கு விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். புவேர்ட்டோ ரிக்கோவின் சான் ஜுவானில் இருந்து வந்த இந்த விமானம், தரையிறங்கும்போது கட்டுப்பாட்டை இழந்து ஓடுபாதையைத் தாண்டிச் சென்று அங்கிருந்த வாகனங்கள் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் 5 பேர் உயிரிழந்ததுடன், 3 பேர் ஆபத்தான நிலையிலும், மேலும் இருவர் லேசான காயங்களுடனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அடர்ந்த கரும்புகையுடன் தீப்பற்றி எரிந்த இந்த விபத்தின் போது, விமானத்தின் கட்டுப்பாட்டு அறையில் விமானி மற்றும் துணை விமானியும், சில பயணிகள் அங்கிருந்த கார்களிலும் சிக்கிக் கொண்டனர். விபத்துக்குள்ளான இந்த போயிங் 767 விமானம் சுமார் 32 ஆண்டுகள் பழமையானது என்பதும், இது முதலில் பயணிகள் விமானமாகப் பயன்படுத்தப்பட்டு, பின்னர் 2015-ல் சரக்கு விமானமாக மாற்றப்பட்டு ’21 ஏர்’ நிறுவனத்தால் இயக்கப்பட்டு வந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. விபத்து நடந்த இடத்தில் விமானத்தில் ஏற்பட்ட எரிபொருள் கசிவைச் சரிசெய்யும் பணியில் தீயணைப்புப் படையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த கோர விபத்தின் காரணமாக மியாமி விமான நிலையத்தில் பிற்பகல் முழுவதும் விமான சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டதோடு, சுமார் 250-க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாயின. உயிரிழந்தவர்கள் விமானத்தில் இருந்தவர்களா அல்லது அது மோதிய வாகனங்களில் இருந்தவர்களா என்பது குறித்து மியாமி அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த விபத்து குறித்து விரிவாக ஆராய தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் தனது விசாரணைக் குழுவை மியாமிக்கு அனுப்பியுள்ளது.
