LATEST NEWS
வெடித்தது மோதல்..! “பவுடர் பூசி டூப் போட்டு நடித்த தற்குறி” சிறைக்கொடுமை Vs ஏசி கேரவன்… விஜய் மீது பாய்ந்த திமுக ஐடி விங் … தமிழக அரசியலில் உச்சகட்ட பரபரப்பு..!!
முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலினின் மிசா தியாகம் குறித்து தமிழக வெற்றிக் கழகத் தரப்பில் விமர்சிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திமுக மற்றும் தவெக தகவல் தொழில்நுட்ப அணிகளுக்கு இடையே கடுமையான சமூக வலைதள மோதல் வெடித்துள்ளது. திமுகவின் வரலாற்றுப் பூர்வமான தியாகங்களை உருவ கேலி மற்றும் அவதூறுகள் மூலம் தவெக அற்பத்தனமாக விமர்சிப்பதாகக் கூறி, திமுக ஐடி விங் தனது எக்ஸ் தள பக்கத்தில் மிகவும் ஆக்ரோஷமான பதிலடியைப் பதிவிட்டுள்ளது.
திரைப்படப் பின்னணியில் இருந்து அரசியல் தளம் நோக்கி நகர்ந்துள்ள முதல்வர் விஜய்யை நோக்கி திமுக ஐடி விங் கடுமையான சாடல்களை முன்வைத்துள்ளது. தந்தையின் தயவால் சினிமாவில் வளர்ந்து, ஏசி கேரவனுக்குள் பவுடர் பூசி, ‘டூப்’ வைத்துச் சண்டை போட்ட ஒரு தற்குறிக்கு, எமர்ஜென்சி காலத்தில் சிறைக் கொட்டடியில் மிசா கைதிகள் போலீசாரின் பூட்ஸ் காலால் மிதிபட்டுச் சிந்திய ரத்தத்தின் வலி என்னவென்று புரியாது என திமுக சாடியுள்ளது. மேலும், சட்டமன்றத்தில் கேட்கப்படும் கேள்விகளுக்குப் பதிலளிக்க மூன்று நாட்கள் மனப்பாடம் செய்து, கேமரா முன்னால் வந்து கத்தி கதறி நடிக்கும் ஒருவருக்கு நிஜ வலிகளின் உணர்வு தெரிய வாய்ப்பில்லை என்றும் அந்தப் பதிவில் கடுமையாகக் விமர்சிக்கப்பட்டுள்ளது.
கலைஞர் கருணாநிதி அணிந்திருந்த மஞ்சள் துண்டு என்பது இந்த மாநிலத்தின் சமூகநீதியையும் சுயமரியாதையையும் காத்த அடையாளம் என்றும், ஆனால் இந்த ‘டம்மி’ முதலமைச்சரின் மேக்கப்பைக் கலைத்துவிட்டால் உள்ளே வெற்று அரசியல் சூனியமும், நிர்வாகத் திறமையின்மையும்தான் மிஞ்சும் என்றும் திமுக தரப்பு சாடியுள்ளது. கால்ஷீட் பேப்பர்களையும், வருமானத்தை மறைத்து வாங்கிய ‘ஐடி ரைடு’ நகல்களையும் மட்டுமே பார்த்துப் பழகிய மூளையுடைய விஜய்க்கு, மிசா கொடூரங்களை ஆவணப்படுத்திய ‘இஸ்மாயில் கமிஷன் அறிக்கை’ போன்ற வரலாற்று ஆதாரங்களைப் படித்துப் புரிந்துகொள்ளும் தகுதி இல்லை என்றும் திமுக ஐடி விங் விளாசியுள்ளது.
எந்தவிதக் கொள்கையோ, சித்தாந்தமோ இல்லாமல், வரலாற்றில் நிலைத்து நிற்கும் தியாகிகளைக் கொச்சைப்படுத்தி அரசியல் செய்ய நினைக்கும் தமிழக வெற்றிக் கழகம் என்ற காகிதக் கப்பல், அவர்கள் உருவாக்கும் அநாகரிகச் சாக்கடையிலேயே விரைவில் மூழ்கிப் போகும் என திமுக எச்சரித்துள்ளது. எமர்ஜென்சி காலத்து மிசா சிறைவாசம் தொடர்பான வரலாற்று ஆவணங்களை அத்துடன் இணைத்து வெளியிட்டுள்ள திமுக, பொய்களையும் அவதூறுகளையும் பரப்பும் தவெக-வின் அற்பத்தனத்தை தமிழ்நாட்டு மக்கள் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றும் மிகக் காரசாரமாகத் தனது கண்டனப் பதிவை முடித்துள்ளது.
