LATEST NEWS
“ஏய்… நாங்க பிச்சை எடுக்க வரல… உழைக்க வந்திருக்கோம்..!” கேட்டுப் பார் நாங்க எவ்வளவு சம்பாதிச்சோம்னு… இணையத்தைக் கலக்கும் சிறுவனின் சுயமரியாதைப் பேச்சு..!!
கிரேட்டர் நொய்டா மேற்கில் உள்ள கவுர் சிட்டி மாலுக்கு வெளியே பதிவு செய்யப்பட்ட ஒரு சிறிய காணொளி சமூக ஊடகங்களில் மக்களின் இதயங்களைக் கவர்ந்து வருகிறது. ‘ரஷ்மி காந்தி’ எனும் உள்ளடக்க உருவாக்குநர் சாலையோரத்தில் அமர்ந்திருந்த ஒரு சிறுவனிடம் பேசும்போது, அவன் பிச்சை எடுக்க வந்திருப்பதாக தவறாகக் கருதி கேள்வி எழுப்பினார். ஆனால் அந்தச் சிறுவனோ, “நாங்கள் பிச்சை எடுக்க வரவில்லை, கடினமாக உழைக்கவே வந்திருக்கிறோம்” என்று சுயமரியாதையுடனும் கம்பீரமாகவும் பதிலளித்து, அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் ஈர்த்தான்.
தான் தகரக் கூரைகள் அமைக்கும் தொழிலைச் செய்வதாகவும், அதன் மூலம் அன்றைய தினம் ரூ.2,000 முதல் ரூ.3,000 வரை சம்பாதித்ததாகவும் பெருமையுடன் கூறிய அந்தச் சிறுவன், தன் சட்டைப்பையிலிருந்த பணத்தாள்களை எடுத்துக் காட்டினான். அவனுடன் இருந்த மற்றொரு சிறுவனும் தனது வருமானத்தைக் காட்ட, அதைக் கண்டு ரஷ்மி ஆச்சரியமடைந்தார். மேலும், தங்களுக்கு வேலை கொடுத்த முதலாளி தங்களை நன்றாகக் கவனித்துக் கொண்டு, உணவாக பர்கர், பீட்சா மற்றும் எலுமிச்சைச் சாறு வழங்கியதாக அந்தச் சிறுவன் மகிழ்ச்சியுடன் தெரிவித்தான்.
https://www.instagram.com/reel/Dao7x4yhwxO/?utm_source=ig_web_button_share_sheet
ரஷ்மி காந்தி இந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் பகிர்ந்த குறுகிய காலத்திலேயே அது சமூக வலைதளங்களில் வைரலானது. சூழ்நிலைகள் எவ்வளவு கடினமாக இருந்தாலும், பிச்சை எடுக்காமல் நேர்மையான உழைப்பையே நம்பி வாழ நினைக்கும் அந்தச் சிறுவனின் மனவுறுதியையும், அவனது உழைப்பின் மீதான சுயமரியாதையையும் இணையவாசிகள் வெகுவாகப் பாராட்டி வருகின்றனர்.
