LATEST NEWS
“ஐயோ கொடுமையே..! சோயா சாப் மேல படுத்து விளையாடும் வாலிபர்கள்… வைரல் வீடியோவால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்…!”
சமீபத்தில் சமூக வலைதளங்களில் 36 விநாடிகள் கொண்ட வீடியோ ஒன்று வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த வீடியோவில், தரையில் அதிக அளவில் பரப்பி வைக்கப்பட்டுள்ள சோயா சாப் போன்ற உணவுப் பொருளின் மீது ஒரு இளைஞர் படுத்து சறுக்குகிறார். மற்றொரு இளைஞர் பைப் மூலம் அவர் மீது தண்ணீரைப் பீய்ச்சி அடிக்கிறார். இருவரும் சிரித்து விளையாடியபடி, உணவுப் பொருளை மிகவும் அசுத்தமான முறையில் கையாளும் காட்சிகள் அதில் பதிவாகியுள்ளன.
இந்த வீடியோ உத்தரப் பிரதேசத்தின் நொய்டா பகுதியில் எடுக்கப்பட்டது என்று இணையத்தில் கூறப்பட்டாலும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் இதுவரை வெளியாகவில்லை. இருப்பினும், உணவின் தூய்மை மற்றும் சுகாதாரத்தைப் பற்றிய தீவிர கவலையை இந்த வீடியோ பொதுமக்களிடையே கிளப்பியுள்ளது. வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் தங்களது அதிர்ச்சியையும் கோபத்தையும் வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, உணவுப் பாதுகாப்புத் துறையின் கண்காணிப்பு மற்றும் ஆய்வுகள் எந்தளவுக்குத் திறம்படச் செயல்படுகின்றன என்ற கேள்விகள் எழுந்துள்ளன. உணவுப் பொருட்களுடன் இதுபோன்ற ஆபத்தான அலட்சியத்தில் ஈடுபட்டவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், வெளியிடங்களில் உணவுப் பொருட்களை வாங்கும்போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.
