LATEST NEWS
“கொரோனா வராது” மொட்டை அடிச்சா ரூ.15,000 பணம்… நம்பி ஏமாந்த பெண்கள் – பின்னணியில் இருந்த விபரீத சதி..!!
கொரோனா வைரஸ் பாதிப்பு வராமல் தடுக்க மொட்டை அடித்துக் கொண்டால் ஆண்களுக்கு ரூ.6,000 மற்றும் பெண்களுக்கு ரூ.15,000 அரசு நிதியுதவி வழங்கப்படும் எனக்கூறி கிராமப்புறப் பெண்களை ஒரு கும்பல் ஏமாற்றிய விசித்திரச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த போலி வாக்குறுதியை நம்பிப் பல பெண்கள் தங்களது தலைமுடியை முழுமையாக மொட்டை அடித்துக் கொண்டு ஏமாந்துள்ளனர். பண உதவி கிடைக்கும் என்ற ஆசையில் மொட்டை அடித்த பின், சொன்னபடி யாரும் வராததால் தாங்கள் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து பெண்கள் அதிர்ச்சியடைந்தனர்.
இந்த மோசடியின் பின்னணியில் உள்ள முக்கியக் காரணம், பெண்களின் தலைமுடியைத் திருடி கறுப்புச் சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்யும் சதியாகும். திருப்பதி போன்ற ஆன்மிகத் தலங்களில் விற்கப்படுவது போல, பெண்களின் நீளமான இயற்கை தலைமுடிக்கு சர்வதேச அளவில் விக் தயாரிக்கும் தொழிலில் நல்ல வரவேற்பும் பல ஆயிரக்கணக்கில் மதிப்பும் உள்ளது. இந்த லாப நோக்கத்திற்காகவே, அப்பாவிப் பெண்களின் அறியாமையையும் பணத் தேவையையும் பயன்படுத்தி இந்தக் கும்பல் கொரோனா வதந்தியைப் பரப்பியுள்ளது.
https://twitter.com/polimernews/status/2081968634558345720/video/1
பாதிக்கப்பட்ட பெண்கள் கொடுத்த புகார்களின் அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். கிராமப்புறங்களில் இது போன்ற போலி நிதியுதவித் திட்டங்கள் மற்றும் வதந்திகளைப் பொதுமக்கள் நம்ப வேண்டாம் என்றும், மொட்டை போடும் கும்பலின் பின்னணியில் உள்ள இடைத்தரகர்களைப் பிடிக்கத் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் எச்சரித்துள்ளனர்.
