VIDEOS
அனைவர் முன்பும் கண்ணீர் விட்டு கதறி அழுத நடிகை பிரியா வாரியர்…. என்ன நடந்தது தெரியுமா?…. வைரல் வீடியோ….!!!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக வளம் வந்து கொண்டிருப்பவர் தான் நடிகை பிரியா வாரியார். இவர் தெலுங்கு மற்றும் கன்னட முடிட்டர் பழமொழி படங்களிலும் நடித்துள்ளார். இருந்தாலும் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தது கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஒரு அடார் லவ் என்ற திரைப்படம் மூலம் தான். அந்தத் திரைப்படத்தில் தனது புருவத்தை தூக்கி கண்ணடித்ததன் மூலம் உலக ரசிகர்களையே தன் வசம் இழுத்தவர். இன்னும் சொல்லப்போனால் ஒரே இரவில் ட்ரெண்டிங்கில் வந்த நடிகை இவர்தான்.
இதனிடையே சமூக வலைத்தளங்களில் எப்போது ஆக்டிவாக இருக்கும் இவரை பல லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள். இவருக்கு பாலிவுட் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அவ்வகையில் மறைந்த நடிகை ஸ்ரீதேவி வாழ்க்கை வரலாறு மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட ஸ்ரீதேவி பங்களா என்ற திரைப்படத்தில் பிரியா வாரியார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
இந்நிலையில் பிரியா வாரியார் ஹீரோயினியாக நடித்துள்ள 4 இயர்ஸ் என்ற படத்தின் ஸ்பெஷல் ஷோ போடப்பட்டுள்ளது. இன்ஜினியரிங் கல்லூரி காதல் ஜோடி பற்றிய கதை என்பதால் இந்த திரைப்படத்திற்கு இவ்வாறு பெயர் வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தை திரையில் பார்த்துவிட்டு வெளியில் வரும்போது பிரியா வாரியர் கதறி கதறி அழுதுள்ளார். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.