LATEST NEWS
திருமணம் முடிந்த இத்தனை மாதங்கள் கழித்து…. ரசிகர்களுக்கு குட் நியூஸ் சொன்ன சீரியல் நடிகை நக்ஷ்சத்திரா….!!!!

பிரபல தொலைக்காட்சி தொடரில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற சீரியல் யாரடி நீ மோகினி. அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை நட்சத்திரா. அதில் தனது நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். இவர் நடித்த வெண்ணிலா கதாபாத்திரம் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்தது. இவர் தற்போது கலர்ஸ் தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் வள்ளி சீரியலில் நடித்து வந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க மறுபக்கம் கடந்த ஆண்டு விஷ்வா என்பவரை காதலித்து இவர் திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் நேற்று ரசிகர்களுக்கு இரண்டு மகிழ்ச்சியான செய்திகளை வெளியிட்டுள்ளார். அதாவது தான் புதிதாக youtube சேனல் ஒன்றை தொடங்கியுள்ளதாகவும் அதன் வழியாக தான் அம்மாவாகி உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இப்போது தான் மூன்று மாதம் என்றும் அவர் மகிழ்ச்சியான செய்தியை வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க