CINEMA
அடேங்கப்பா….! 1 நிமிஷத்துக்கு 1 கோடியா…? தமிழில் ஹீரோயின்களை முந்திய ஒரே பட நடிகை…!!

சினிமாவில் ஓர் அளவிற்கு வெற்றி பெற்று விட்டாலும் ஒருவருடைய சம்பளம் என்பது பல கோடிகளை அடைந்து விடுகிறது. நடிகர் நடிகைகள் போட்டி போட்டுக் கொண்டு நடிக்கும் சூழலில் அதிகமாக யார் சம்பளம் வாங்குகிறார்கள் என்ற போட்டியும் நீடித்து வருகிறது. அப்படித்தான் பாலிவுட் நடிகை ஒருவர் ஒரு படத்தில் நடித்ததற்கு ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி சம்பளம் வாங்கியுள்ளார். அவர் யார் என்றால் தெலுங்கு படமாக வெளிவந்த ஸ்கந்தா படத்தில் சிறப்பு பாடல் ஒன்றில் நடித்துள்ள பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுதெல்லா தான் .
பாலிவுட் படங்களில் நடித்து வரும் இவர் தமிழில் லெஜெண்ட் சரவணன் படத்தில் நடித்துள்ளார் . லெஜன்ட் படத்தில் நடிப்பதற்கு இவர் 20 கோடி ரூபாய் வரை சம்பளம் வாங்கியதாகவும் கூறப்பட்டது. இது உண்மையா? என்பது தெரியாத நிலையில் இது பற்றி படத்தின் வெளியயீட்டின் போது பரவலாக பேசப்பட்டது.
ஸ்கந்தா படத்தில் இவர் நடித்த பாடல் என்பது வெறும் மூன்று நிமிடம் மட்டுமே இருந்தது. அந்த பாடலுக்கு நடனமாட இவர் 3 கோடி ரூபாய் சம்பளம் பெற்றுள்ளார். அப்படி பார்த்தால் ஒரு படத்தில் நடிப்பதற்கு ஒரு நிமிடத்திற்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கும் நடிகையாக ஊர்வசி ரவுத்தெல்லா நாட்டிலேயே பெரிய இடத்தில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.