தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லீ. இவரின் இயக்கத்தில் முதல் முதலாக வெளியான திரைப்படம் ராஜா ராணி. தனது முதல் திரைப்படத்திலேயே ஆர்யா, நயன்தாரா மற்றும் நஸ்ரியா உள்ளிட்ட பெரிய நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து அசத்தினார். இதனைத் தொடர்ந்து பாலிவுட்டில் கால் பதித்துள்ள அட்லி நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக வைத்து படம் ஒன்றை இயக்கி வருகின்றார். இந்தத் திரைப்படத்தில் நடிகை நயன்தாரா நடிக்கின்றார். அட்லீ இயக்கம் முதல் பாலிவுட் திரைப்படம் இதுவாகும்.

இந்த திரைப்படத்திற்கு ஜவான் என பெயரிடப்பட்டுள்ளது. இவர் கடந்த 2014 ஆம் ஆண்டு பிரியா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.  திருமணம் முடிந்து கிட்டத்தட்ட எட்டு வருடங்கள் கழித்து பிரியா கர்ப்பமாக இருப்பதாக சமீபத்தில் அவர்கள் அறிவித்த நிலையில் வளைகாப்பு விழா குறித்த புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. இந்நிலையில் நேற்று முன்தினம் அட்லீக்கு அழகான ஒரு ஆண் குழந்தை பிறந்துள்ளது என அவரின் twitter பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.