7 வருஷமா வீட்டிற்குள்ளேயே அடஞ்சி கிடக்குறேன்…. நண்பர்கள் கூட இல்ல – டிஸ்கோ சாந்தி உருக்கம்…!! - cinefeeds
Connect with us

CINEMA

7 வருஷமா வீட்டிற்குள்ளேயே அடஞ்சி கிடக்குறேன்…. நண்பர்கள் கூட இல்ல – டிஸ்கோ சாந்தி உருக்கம்…!!

Published

on

70ஸ் இளசுகளை கவர்ந்திழுத்த கவர்ச்சி கன்னி சில்க்கிற்கு நிகராக ரசிகர்களால் ரசிக்கப்பட்டவர் டிஸ்கோ சாந்தி. இவரின் நடனம் 80களில் மிகவும் பிரபலம். இவர் குணச்சித்திரக் கதாப்பாத்திரங்கள் மற்றும், நடன மங்கையாக திரைப்படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம் உள்ளிட்ட தென்னிந்திய திரைப்படங்களிலும் பாலிவுட்டிலும் நடித்துள்ளார்.வெள்ளை மனசு படம் மூலம் தமிழுக்கு அறிமுகமான இவர் ஊமை விழிகள் திரைப்படத்தில் நடனமாடிய இராத்திரி நேரத்து பூஜையில் என்ற பாடல் பிரபலம் ஆனதால், அதன் பின் நிறைய படங்களுக்கு ஒரு பாடலில் ஆடும் வாய்ப்பினைப் பெற்றார்.

இறுதியாக 1996-ம் ஆண்டு துறைமுகம் என்னும் படத்தில் தோன்றியிருந்தார் டிஸ்கோ சாந்தி.இந்த தம்பதிகளுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் இருந்தனர். இவரது கணவர் கடந்த 2013-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். 1996 -ம் ஆண்டு ஸ்ரீஹரி என்பவரை திருமணம் செய்து கொண்ட பிறகு திரை திரைத்துறையிலிருந்து விலகினார்.

Advertisement

இதற்கிடையில் கணவரும் இறந்துவிட்டார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் பேசிய அவர், கணவர் இறப்பிற்கு பின்னர் 7 வருடங்களாக வீட்டை வீட்டு வெளியே செல்லாமல் அடைந்து கிடக்கிறேன். எனக்கு பெண் தோழிகள் கூட கிடையாது  என்று கூறியுள்ளார்.

Advertisement

Copyright © 2023 www.cinefeeds.in