CINEMA
அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் போல உருவ கேலிக்கு ஆளான பிரபல சினிமா ஜோடிகள்… சிறப்பு தொகுப்பு..!!

நடிகர் அருண் பாண்டியனின் மகளான கீர்த்தி பாண்டியனை சமீபத்தில் அசோக் செல்வன் மணம் முடித்தார். கீர்த்தி பாண்டியன் 2019 ஆம் ஆண்டு தும்பா திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான நிலையில் அதனைத் தொடர்ந்து அன்பிற்கினியால் படத்தில் நடித்து அடுத்ததாக கண்ணகி மற்றும் ப்ளூ ஸ்டார் ஆகிய திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் ப்ளூ ஸ்டார் படத்தில் நடித்த போது அசோக் செல்வன் மற்றும் கீர்த்தி பாண்டியன் இடையே காதல் மலர்ந்த நிலையில் இவர்கள் கடந்த செப்டம்பர் 13ஆம் தேதி திருமணம் செய்து கொண்டனர்.
இந்த நிலையில் தன்னுடைய மனைவி கீர்த்தி பாண்டியன் உருவ கேலி செய்தவர்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக செல்வன் மனைவியுடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து இந்த உலகிலேயே பேரழகியுடன் நான் என்று பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அசோக் செல்வன் மட்டுமல்லாமல் சில நடிகர் நடிகைகளும் தங்கள் ஜோடிகளுடன் உருவ கேலிக்கு ஆளாகியுள்ளனர்.
நடிகை தேவயானி- ராஜகுமாரன்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்த தேவயானி தற்போது சின்ன திரையில் கலக்கிக் கொண்டிருக்கிறார். இவர் ராஜகுமாரன் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளன.
காதல் சந்தியா – வெங்கட் சந்துரு:
பரத் நடிப்பில் வெளியான காதல் திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்தான் சந்தியா. அதன் பிறகு இவர் பல திரைப்படங்களில் நடித்த நிலையில் இவர் வெங்கட் சந்துரு என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு குழந்தை உள்ளது.
நஸ்ரியா – பகத் பாசில்:
தமிழ் சினிமாவின் பிரபல நடிகையான நஸ்ரியா மலையாள சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் பகத் பாசிலை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
மகாலட்சுமி – ரவீந்தர்
பிரபல சின்னத்திரை சீரியல் நடிகை ஆன மகாலட்சுமி கடந்த வருடம் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் பெரும் சர்ச்சையை கிளப்பிய நிலையில் அதன் பிறகு பல விமர்சனங்களும் எழுந்தன. தற்போது இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.