LATEST NEWS
80ஸ் நடிகை சரிதாவின் இரண்டு மகன்களை பார்த்துள்ளீர்களா?…. வைரலாகும் க்யூட் புகைப்படம் இதோ….!!!!
தமிழ் சினிமாவில் 80 மற்றும் 90களில் கலக்கிய பிரபல நடிகை தான் சரிதா. இவர் கே பாலச்சந்தர் இயக்கத்தில் நிறைய திரைப்படங்களில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள இவர் சின்னத்திரையிலும் நடித்து வந்துள்ளார். இவர் முதல் முதலாக 1978 ஆம் ஆண்டு மரோ சரித்ரா என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
அதனைத் தொடர்ந்து கே பாலசந்தர் இயக்கத்தில் இவர் நடித்த தண்ணீர் தண்ணீர், அச்சமில்லை அச்சமில்லை மற்றும் புதுக்கவிதை உள்ளிட்ட பல திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு மற்றும் கன்னட முள்ளிட பல தென்னிந்திய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார். இதனிடையே சரிதாவிற்கு இரண்டு திருமணங்கள் நடைபெற்ற நிலையில் இரண்டுமே விவாகரத்தில் முடிவடைந்தது. தற்போது இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்களின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.