LATEST NEWS
170 கிமீ பயணம் செஞ்சும் இப்படியா இருக்கும்? ரயிலை பார்த்து மிரண்டு போன வடநாட்டு பயணி!வீடியோ வெளியீட்டதால் பரபரப்பு..!!
மதுரை மற்றும் ராமேஸ்வரம் இடையே இயங்கும் சாதாரண பயணிகள் ரயிலின் தூய்மையைப் பாராட்டும் வகையிலான வீடியோ ஒன்று சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. கௌரவ் என்ற பயணி, அந்த ரயிலில் ஏறியபோது அதன் தரை, இருக்கைகள் மற்றும் கழிவறைகள் என அனைத்தும் கண்ணாடி போல் பளபளப்பாக இருப்பதைக் கண்டு ஆச்சரியமடைந்து அதனை வீடியோவாகப் பதிவிட்டார். பயணம் தொடங்குவதற்கு முன்பு மட்டும்தான் இப்படி சுத்தமாக இருக்கும் எனச் சிலர் விமர்சித்த நிலையில், 170 கிலோமீட்டர் பயணம் முடிவடைந்த பின்பும் அந்த ரயில் சிறிதும் அழுக்காகாமல் அதே தூய்மையுடன் இருப்பதை அவர் மற்றொரு வீடியோ மூலம் நிரூபித்துக் காட்டினார்.
இந்தச் சம்பவம் இணையத்தில் வட மற்றும் தென் இந்திய மக்களிடையேயான சமூகப் பொறுப்பு குறித்த புதிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. தென் மாநிலங்களில் உள்ள மக்களின் அதிக கல்வியறிவு மற்றும் விழிப்புணர்வு காரணமாகவே பொதுச் சொத்துக்கள் இவ்வளவு சுத்தமாகப் பராமரிக்கப்படுவதாகவும், வட இந்தியாவில் உள்ள ரயில்களில் இந்த நிலை இல்லை என்றும் பல இணையவாசிகள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். அதேவேளையில், இதனைப் பிராந்திய ரீதியான மோதலாகப் பார்க்காமல், இந்தியா முழுவதும் உள்ள அனைத்து மக்களும் தூய்மையைப் பேணுவதில் பொறுப்புடன் செயல்பட வேண்டும் எனச் சில பயனர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
