LATEST NEWS
“விவசாயிகள் கவனத்திற்கு..! 3 நிபந்தனை.. இல்லையெனில் ரூ.2,000 கட்.. வெளியான புதிய அப்டேட்..!!
பிரதமர் கிசான் சம்மான் நிதி திட்டம் என்பது நாட்டின் சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு நிதி உதவி வழங்குவதற்காக மத்திய அரசால் தொடங்கப்பட்ட ஒரு முக்கியமான நலத்திட்டமாகும். இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாய குடும்பங்களுக்கு ஆண்டிற்கு ரூ.6,000 உதவித்தொகையாக வழங்கப்படுகிறது.இந்நிலையில் 24-வது தவணைத் தொகை குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது. இந்தத் தவணைக்கான தொகையை விடுவிப்பதற்கான அதிகாரப்பூர்வ தேதியை அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
இருப்பினும், கடந்த ஆண்டைப் போலவே இந்த ஆண்டும் தீபாவளி பண்டிகைக் காலமான அக்டோபர் – நவம்பர் மாதங்களில் விவசாயிகளின் கணக்கில் பணம்பகிர்ந்தளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில், அடுத்த தவணைத் தொகையைப் பெற தகுதியான விவசாயிகள் உடனடியாக 3 நிபந்தனைகளை பூர்த்தி செய்ய வேண்டியது கட்டாயமாகும். மேலும், இந்த விவரங்களை PM கிசான் போர்ட்டலில் முறைப்படி சரிபார்த்திருந்தால் மட்டுமே அடுத்த தவணைக்கான பணம் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
