LATEST NEWS
“மத்திய அரசு ஊழியர்களுக்கு மெகா தீபாவளி பரிசு..” 4% DA உயர்வு உறுதி..?பண்டிகை காலத்தில் வெளியாகப்போகும் அதிரடி அறிவிப்பு!
மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு தீபாவளிப் பரிசாக, இந்தாண்டு நவராத்திரி மற்றும் தசரா பண்டிகைகளை ஒட்டி அகவிலைப்படி ) உயர்வை மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் என்று பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய பொருளாதாரச் சூழல் மற்றும் நுகர்வோர் விலை குறியீட்டு எண்களின் அடிப்படையில், ஊழியர்களின் அகவிலைப்படியில் நேரடியாக 4 சதவீதம் வரை உயர்வு ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகமாக உள்ளதாகப் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். பண்டிகைக் காலத்தில் வரவிருக்கும் இந்த அறிவிப்பு மத்திய அரசு ஊழியர்களிடையே பெரும் மகிழ்ச்சியையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
இந்த 4 சதவீத அகவிலைப்படி உயர்வு ஊழியர்களின் மாதாந்திர அடிப்படை ஊதியத்தை உயர்த்துவது மட்டுமின்றி, அவர்களது வருங்கால வைப்பு நிதி, பணிக்கொடைமற்றும் ஓய்வூதியதாரர்களின் மாதாந்திர ஓய்வூதியம் ஆகியவற்றிலும் சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். இதனால் ஒட்டுமொத்தமாக ஊழியர்களின் கைக்குக் கிடைக்கும் பணப்புழக்கம் கணிசமாக அதிகரிக்கும் என்பதால், குடும்பப் பொருளாதாரத்தை மேம்படுத்த இந்த DA உயர்வு பெரிதும் உதவும் என ஊழியர்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
