CRIME
“அந்த ஒரு கடிதம் மட்டும் வரலைனா… மருமகள் மாயமான 3 மாதத்தில் அண்டை வீட்டுக்காரரும் மரணம்…! அலிகார் கௌரவக் கொலையில் அம்பலமான பகீர் உண்மை..!!”
உத்தரப் பிரதேச மாநிலம் அலிகர் மாவட்டம், அக்ராபாத் காவல் நிலையப் பகுதியில் 2026 பிப்ரவரி 21 அன்று வினிதா என்ற பெண் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக மூத்த காவல் கண்காணிப்பாளர் நீரஜ் ஜடோனுக்கு வந்த ரகசியக் கடிதத்தின் அடிப்படையில், ஊரகக் காவல் கண்காணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்ட தனிப்படை விசாரணை நடத்தியது. விசாரணையில், வினிதா தன் பக்கத்து வீட்டுக்காரரான டாக்டர் சத்யேந்திராவுடன் கள்ள உறவில் இருந்ததாகக் கூறி, அவரது மாமனார் அஜய் பால் வினிதாவைக் கொலை செய்து உடலை ஆற்றில் வீசியது தெரியவந்தது.
இச்சம்பவம் நடந்து சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு, அண்டை வீட்டுக்காரரான டாக்டர் சத்யேந்திராவும் சந்தேகத்திற்கிடமான முறையில் உயிரிழந்தார். அவரது பிரேதப் பரிசோதனை அறிக்கையில் அவருக்கு நஷம் கொடுக்கப்பட்டதாகக் கூறப்பட்ட வழக்கு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், அவரது தந்தை புத்பால் காவல்துறையில் புகார் அளித்தார். தனது மகன் சத்யேந்திராவின் மரணத்திற்கும் வினிதாவின் மாமியார் வீட்டாருக்குத் தொடர்பிருப்பதாகவும், வினிதாவையும் அவர்களே கொலை செய்ததாகவும் அளித்த மனுவே இந்த ரகசியத்தை வெளிக்கொண்டு வந்தது.
இக்கொடூரச் சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், முதன்மை குற்றவாளியான மாமனார் அஜய் பால் மற்றும் அவரது மைத்துனர் பிரதீப் ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும், கொலைக்கு மற்றும் உடலை எடுத்துச் செல்லப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிளையும் பறிமுதல் செய்தனர். உயிரிழந்த டாக்டர் சத்யேந்திராவின் உள்ளுறுப்புகள் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், அதன் அறிக்கை கிடைத்தவுடன் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மூத்த காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
