CRIME
அய்யோ கொடுமையே… புதையல் இருக்கு தம்பி… நள்ளிரவில் அழைத்துச் சென்று அநியாயமாகக் கொன்ற சித்தப்பா.. விசாரணையில் வெளிவந்த பகீர் பின்னணி..!!
உத்தரப் பிரதேச மாநிலம் ரேபரேலியின் பதோக்கர் காவல் எல்லைக்குட்பட்ட சாய் நதியில் வாலிபர் ஒருவர் பிணமாக மீட்கப்பட்ட வழக்கை காவல்துறை வெற்றிகரமாக முடிவுக்குக் கொண்டுவந்துள்ளது. உயிரிழந்தவர் புரே ரகுராஜ் மஜ்ரே சராைதாமு கிராமத்தைச் சேர்ந்த சரோஜ் குமாரின் மகன் சிவம் யாதவ் என அடையாளம் காணப்பட்டது. கடந்த செப்டம்பர் 5-ஆம் தேதி இரவு முதல் அவரைக் காணவில்லை என்று குடும்பத்தினர் அளித்த புகாரின் பேரில் தேடுதல் வேட்டை நடந்து வந்தது. இந்நிலையில், சிவம் யாதவ் படுகொலை செய்யப்பட்டதை உறுதி செய்த காவல்துறை, சப்ஹாஷ் மற்றும் உபேந்திர அவஸ்தி ஆகிய இரு குற்றவாளிகளைக் கைது செய்து, கொலக்கு பயன்படுத்தப்பட்ட துண்டையும் பறிமுதல் செய்துள்ளது.
காவல்துறையின் விசாரணையில் இக்கொலைக்கான அதிர்ச்சி பின்னணி வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கைதான சப்ஹாஷ், சிவமிற்கு உறவுமுறையில் சித்தப்பா ஆவார். சிவம் தனது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்ற நிலையில், சப்ஹாஷின் அண்ணிக்கும் சிவமிற்கும் இடையே கள்ளத்தொடர்பு இருப்பதாக சப்ஹாஷிற்கு சந்தேகம் எழுந்துள்ளது. இதனால் குடும்பத்திற்கு ஏற்படும் அவமானத்திற்கும் சமூகப் பழிக்கும் பயந்த சப்ஹாஷ், தனது நண்பன் உபேந்திர அவஸ்தியுடன் இணைந்து சிவத்தைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியுள்ளார்.
திட்டத்தின்படி, செப்டம்பர் 5-ஆம் தேதி இரவு புதையல் எடுத்துத் தருவதாகக் கூறி சிவத்தை சாய் நதியின் கோர்ச்சந்தாமாவ்-லோத்வாரி பாலத்திற்கு அருகில் வரவழைத்துள்ளனர். சிவம் அங்கு வந்ததும், இருவரும் இணைந்து துண்டால் அவரது கழுத்தை நெரித்துக் கொன்று, உடலை சாய் நதியில் வீசியுள்ளனர். எலக்ட்ரானிக் கண்காணிப்பு மற்றும் தீவிர விசாரணை மூலம் குற்றவாளிகளைக் கண்டறிந்த காவல்துறை, அவர்கள் இருவரையும் நீதிமன்றக் காவலில் அடைத்து மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகிறது.
