LATEST NEWS
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்: எங்களுக்கு லாப நோக்கம் கிடையாது… மக்களின் நலனே முக்கியம்.. தவெக அரசிடம் ஜாய் ஆலுக்காஸ் கொடுத்த வாக்குறுதி..!!
தமிழக அரசின் ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தில் முன்னணி நகை நிறுவனமான ஜாய் ஆலுக்காஸ் தங்களை இணைத்துக் கொண்டுள்ளது. இத்திட்டத்தின் மூலம் மக்களுக்கு வழங்கப்படும் தங்க மோதிரங்களை விநியோகிக்கும் பொறுப்பை அந்நிறுவனம் ஏற்றுள்ளது. இந்தத் திட்டத்தில் தங்களுக்கு லாப நோக்கம் ஏதுமில்லை என்றும், மக்கள் நலனுக்காக அரசுடன் இணைந்து பொதுமக்களுக்குத் திரும்ப வழங்கும் நல்நோக்கிலேயே இதில் பங்கேற்றுள்ளதாகவும் ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் தெளிவுபடுத்தியுள்ளது.
ஏழை எளிய மக்களுக்குப் பயனளிக்கும் இந்த உன்னதமான திட்டத்தில் தங்களையும் ஒரு பங்காளராக இணைத்துக் கொள்ள வாய்ப்பளித்த முதல்வர் விஜய்க்கு ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் தங்களது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டுள்ளது. அரசின் இந்த மக்கள் நலத் திட்டத்திற்குத் தங்களால் இயன்ற முழு ஒத்துழைப்பையும், சேவையையும் தொடர்ந்து வழங்கத் தயாராக இருப்பதாகவும் நிறுவனத்தின் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்குத் தங்களால் வழங்கப்படும் அனைத்து தங்க மோதிரங்களும் அசல் மற்றும் மிக உயர்ந்த தரம் கொண்டவையாக இருக்கும் என அந்நிறுவனம் உறுதிபடத் தெரிவித்துள்ளது. வழங்கப்படும் மோதிரங்கள் அனைத்தும் நூறு சதவீதம் தூய்மை, பிஐஎஸ் ஹால்மார்க் (Hallmark) முத்திரை மற்றும் நேர்த்தியான கைவினைத்திறனுடன் தரக் கட்டுப்பாடுகளுக்கு உட்பட்டே மக்களுக்குச் சென்றடையும் என ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் உறுதியளித்துள்ளது.
