LATEST NEWS
“முதல்ல கவுன்சிலர் ஆகி காட்டுங்க..!” சீமானை டோட்டலாக டேமேஜ் செய்த தவெக அமைச்சர் ரமேஷ்.. தேர்தல் தோல்வியை சுட்டிக்காட்டி அலறவிட்ட அறநிலையத்துறை அமைச்சர்..!!
நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், தவெக அமைச்சர்கள் மற்றும் தவெக ஆட்சியைத் தொடர்ந்து விமர்சித்து வரும் நிலையில், அதற்கு அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். அண்மையில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், தற்போதைய சட்டமன்றம் சினிமா போல இயங்குவதாகவும், அமைச்சர்கள் முதல் தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் வரை அனைவரும் துதி பாடுவதிலும், பாட்டுப் பாடுவதிலும் மட்டுமே குறியாக இருக்கிறார்கள் என்றும் சாடியிருந்தார். இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பேசிய அமைச்சர் ரமேஷ், சீமான் முதலில் ஒரு வார்டு கவுன்சிலராக வெற்றிபெறும் வழியைத் தெரிந்துகொள்ளட்டும் என்றும், அதன் பிறகு சட்டமன்றத்தில் பேசும் மக்கள் பிரதிநிதிகளைப் பற்றி அவர் விமர்சிக்கலாம் என்றும் மிகக் காரசாரமாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறாததுடன், போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் டெபாசிட்டையும் இழந்திருந்தது. காரைக்குடி தொகுதியில் போட்டியிட்ட அக்கட்சியின் தலைவர் சீமானும் தோல்வியைத் தழுவிய நிலையில், முந்தைய தேர்தல்களில் 8 சதவீதமாக இருந்த நாம் தமிழர் கட்சியின் வாக்கு வங்கி இந்தத் தேர்தலில் 4 சதவீதமாகக் சரிந்தது. தேர்தல் முடிவுகளுக்குப் பின் வீடியோ வெளியிட்டிருந்த சீமான், “நான் ஊர் ஊராகச் சென்று எவ்வளவோ கத்தியும் மக்கள் எனக்கு வாக்களிக்கவில்லை; ஆனாலும் நம்பிக்கை இழந்துவிடவில்லை, இந்தத் தோல்வியை ஒரு பாடமாக ஏற்போம்” என்று குறிப்பிட்டிருந்த சூழலில், தற்போது தவெக அரசுக்கும் சீமானுக்கும் இடையே வெடித்துள்ள இந்த அரசியல் மோதல் தமிழக அரசியலில் பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
