LATEST NEWS
துபாயில் கோலாகலமாக நடந்த ராம்சரண் மனைவியின் வளைகாப்பு…. வைரலாகும் புகைப்படங்கள்….!!!!
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கொடிகட்டி பறந்து கொண்டிருப்பவர் தான் சிரஞ்சீவி. இவரைப் போலவே அவரின் மகனும் சிறந்து விளங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தனது மகன் ராம்சரனை சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்.
அவரின் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஆர் ஆர் ஆர் மற்றும் ஆச்சாரியா உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ளனர். தெலுங்கு சினிமாவில் இவருக்கென தனி ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனிடையே ராம்சரண் கடந்த 2012 ஆம் ஆண்டு உபசனா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பிறகு கிட்டத்தட்ட பத்து வருடங்கள் ஆகியும் குழந்தை பெற்றுக் கொள்ளாமல் வாழ்ந்து வந்த நிலையில் சமீபத்தில் தனது மனைவி கர்ப்பமாக இருக்கும் செய்தியை ராம்சரண் வெளியிட்டு இருந்தார். இதனை தொடர்ந்து இவர்களுக்கு ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்தனர்.
இந்நிலையில் துபாயில் நண்பர்கள் மற்றும் சில உறவினர்கள் மட்டும் கலந்து கோலாகலமாக வளைகாப்பு நடந்துள்ளது. இணையத்தில் வைரல் ஆகி வரும் நிலையில் ரசிகர்கள் தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
