LATEST NEWS
மனைவியுடன் வாழும் வாழ்க்கை குறித்து முதன்முறையாக மனம் திறந்த ரவீந்தர்…. என்ன சொன்னார் தெரியுமா….????

சின்னத்திரை சீரியல் நடிகைகளில் ஒருவராக ரசிகர்களின் மனதை வெகுவாக கவர்ந்தவர் தான் நடிகை மகாலட்சுமி. இவர் கடந்த செப்டம்பர் மாதம் தயாரிப்பாளர் ரவிந்தரை இரண்டு வருடங்களாக காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களின் திருமணம் திடீரென நடந்த நிலையில் பல சர்ச்சைக்குள்ளானது. அதுமட்டுமல்லாமல் பல விமர்சனங்களும் எழுந்த நிலையில் இவை அனைத்தையும் கண்டு கொள்ளாத ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தங்கள் வாழ்க்கையில் சிறப்பாக வாழ்ந்து வருவதாக தெரிவித்தனர்.
அதே சமயம் ரவீந்தர் உடல் எடையை குறைப்பதற்கு மகாலட்சுமி தினமும் பல கட்டுக்கோப்பான உணவுகளை மட்டும் கொடுத்து வருகிறார். மறுபக்கம் மகாலட்சுமி சீரியலில் அதிகம் கவனம் செலுத்தி வர இணையத்தில் பல விளம்பரங்களையும் செய்து வருகிறார். இதனிடையே இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தம்பதி அடிக்கடி தங்களின் க்யூட்டான புகைப்படங்களை பகிர்வது வழக்கம்.
அவ்வகையில் தற்போது ரவீந்தர் அவருடைய சமூக வலைத்தளங்களில் கருப்பு நிற ஆடை அணிந்து தம்பதிகளாக எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உன் சிரிப்பில் சொர்க்கத்தை கண்டேனடி என கவிதை எழுதி அதனை பகிர்ந்து உள்ளார். அதனைப் பார்த்த நெட்டிசன்கள் பலரும் உங்களைப் பார்க்க பொறாமையாக இருக்கிறது என கருத்துக்களை கூறி புகைப்படத்தை வைரல் ஆக்கி வருகிறார்கள்.
Instagram இல் இந்த இடுகையைக் காண்க