TRENDING
தன்னைவிட சிறிய வயது இளைஞருடன் தகாத உறவு..! பார்த்தால் 5-வயது மகனுக்கு படுக்கையில் நேர்ந்த பரிதாபம்.. மதுரையில் நடந்த கொடூரம்..
மதுரை மாவட்டம் குச்சம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராம்குமார் ,ஆனந்தஜோதி தம்பதிகளுக்கு திருமணமாகி கடந்த ஆறு ஆண்டுகளாகிறது ஜீவா என்ற மகனும் லாவண்யா என்ற மகளும் உள்ளனர். இதில் கணவரான ராம்குமார் கொத்தனார் வேலைசெய்துவருகிறார். மனைவி ஆனந்த ஜோதியும் விருதுநகரில் உள்ள கடையில் வேலைசெய்து வருகிறார்.
பின்னர் சம்பவத்தன்று மகன் ஜீவா நீண்ட நேரம் தூங்கியநிலையில் இருந்துள்ளார். எழுப்பினாலும் எழுந்திருக்கவில்லை அதிர்ச்சியடைந்த பெற்றோர்கள் மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர் பரிசோத்தித்த மருத்துவர்கள் சிறுவன் இறந்து பலமணிநேரமாகிறது. என்றனர் செய்வதறியாது என்று கதறி அழுதார் தந்தையான ராம்குமார்.
பின்னர் மகன் இறப்பு குறித்து மனைவியிடம் கேட்டார் ராம்குமார் எனக்கே தெரியவில்லை நான் வெளியே சென்று வந்து பார்த்தபோது மகன் தூங்கி கொண்டுஇறந்தான் என்று கூறினார். இதில் சந்தேகமடைந்த ராம்குமார் மனைவி மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தார்.
இதில் ஆனந்த ஜோதி கணவர் ராம்குமார் உறவுக்காரப்பையன் மருதுபாண்டி என்பவருடன் கள்ளத்தொடர்பு இருந்துள்ளதை கண்டுபிடித்தனர். பின்னர் கணவன் இல்லா நேரத்தில் நாங்கள் இருவரும் தனிமையில் இருந்தோம் அதனை மகன் பார்த்தால் இதனை வெளியே சொல்லிவிடுவான் என்று நினைத்து தூங்கி கொண்டு இருந்த மகனின் முகத்தில் தலையணையை வைத்து அமுக்கி கழுத்தில் கயிற்றை இறுக்கி கொலை செய்தோம் என்று வாக்கு மூலம் அளித்தார் ஆனந்த ஜோதி