LATEST NEWS
“நம்பவே முடியல.. புதுப்பித்த வீட்டின் அடியில் ஒளிந்திருந்த மர்மம்!” கணக்கிலடங்கா தங்கம் கிடைத்ததால் பரபரப்பு… ஓடி வந்த அதிகாரிகள்.. பெல்ஜியத்தில் மாபெரும் அதிசய சம்பவம்..!!”
பெல்ஜியம் நாட்டில் சமூக நல அமைப்பு ஒன்றிற்குச் சொந்தமான பழைய கட்டடத்தை தனியார் பில்டர்கள் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வந்தபோது, அங்கு மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் 100 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் பெரும் வியப்பையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது. கட்டுமானப் பணிகளின் போது சுவர்கள் அல்லது தரைப்பகுதியைச் சீரமைத்தபோது எதிர்பாராதவிதமாக இந்தத் தங்கம் சிக்கியுள்ளது.
தங்கம் கண்டுபிடிக்கப்பட்டதை அறிந்தவுடன் உடனடியாகக் காவல்துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், அந்தத் தங்கக் கட்டிகளை முழுமையாக மீட்டுத் தங்களின் பாதுகாப்பின் கீழ் பத்திரப்படுத்தினர். இருப்பினும், இவ்வளவு பெரிய மதிப்பிலான தங்கக் கட்டிகளை அங்கு பதுக்கி வைத்தது யார், அது எந்த ஆண்டைச் சேர்ந்தது அல்லது யாருக்குச் சொந்தமானது என்பது குறித்த எந்தவொரு ஆவணமோ அல்லது தகவலோ இதுவரை கிடைக்கவில்லை. இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
