Uncategorized
“டம்மி CM’, ‘வெட்கம்கெட்ட அரசு’, ‘கேடுகெட்ட அரசு” இப்படியெல்லாம் சொன்னேன்.. ஆனால் தண்ணீர் வரணும்னு சொன்னதுக்கு கைது பண்ணிட்டாங்க.. தவெக அரசை கிழித்தெடுத்த உதயநிதி ஸ்டாலின்..!
தனது கைது நடவடிக்கை குறித்துத் திமுக இளைஞரணி செயலாளரும் அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், அரசே தனக்குச் செலவு செய்து இலவசமாக ரோடு ஷோ அழைத்துச் சென்றதாக விமர்சித்துள்ளார். திமுக பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அவர், தன்னை எதற்காகக் கைது செய்ய வருகிறார்கள் என்பது குறித்துப் பல்வேறு எண்ணங்கள் இருந்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
அரசை நோக்கித் தான் முன்வைத்த கடுமையான விமர்சனங்களே இந்த கைதுக்குக் காரணம் என்று முதலில் நினைத்ததாக அவர் கூறினார். மேடைகளில் ‘டம்மி CM’, ‘வெட்கம்கெட்ட அரசு’, ‘கேடுகெட்ட அரசு’ என்று பேசியதற்கோ, அல்லது ‘விவசாயிகளை நடுரோட்டில் விட்டுவிட்டனர்’ என்று குற்றம் சாட்டியதற்கோ இந்த அரசு எந்த ஒரு எதிர்வினையும் ஆற்றவில்லை என்று சுட்டிக்காட்டினார்.
இறுதியாக, இந்த விமர்சனங்கள் எதற்கும் வராத காவல்துறை, தான் மேடையில் ‘காவிரியில் தண்ணீர் வரவேண்டும்’ என்று தமிழகத்தின் வாழ்வாதார உரிமைக்காகப் பேசிய உடனே தன்னை கைது செய்ததாக உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
