சேர்ந்தும் வாழாமல், விவாகரத்தும் கொடுக்காமல் படுத்தும் கணவர்…! திருமண வாழ்க்கை முதன்முறையாக விஜய் பட நடிகை ஓபன் டாக்…! - cinefeeds
Connect with us

LATEST NEWS

சேர்ந்தும் வாழாமல், விவாகரத்தும் கொடுக்காமல் படுத்தும் கணவர்…! திருமண வாழ்க்கை  முதன்முறையாக விஜய் பட நடிகை ஓபன் டாக்…!

Published

on

மாடல் அழகியாகவும் விளம்பர பட நடிகையாகவும் வலம் வந்தவர் நடிகை சம்யுக்தா சண்முகம். இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டதன் பிறகு ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். இந்த பிரபலத்தை கொண்டு இவருக்கு பட வாய்ப்புகளும் கிடைத்தன சமீபத்தில் இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் நடிகர்கள் ஜீவா ஸ்ரீகாந்த் ஜெய் ஆகியோர் நடித்திருந்த காபி வித் காதல் என்ற திரைப்படத்தில் நடிகர் ஸ்ரீகாந்தின் மனைவியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார்.

அதன் பிறகு வாரிசு படத்தில் நடிகர் விஜயின் வாரிசு படத்தில் தெலுங்கு நடிகர் ஸ்ரீகாந்திற்கு மனைவியாக நடித்து ரசிகர்களை கவர்ந்திருந்தார் நடிகை சம்யுக்தா சண்முகம். தொடர்ந்து பட வாய்ப்புக்காக முயற்சி செய்து வரும் இவர் இணைய பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவு செய்வதை வழக்கமாக வைத்துள்ளார்.

Advertisement

சமீபத்தில் இவர் தனது திருமண வாழ்க்கை குறித்து பேட்டி ஒன்றை அளித்திருந்தார். அதில், தன் கணவர் துபாயில் இருப்பதாகவும், ஏற்கனவே நான்கு ஆண்டுகள் வேறு ஒரு பெண்ணுடன் அவர் வாழ்ந்து கொண்டிருந்ததாகவும் வேதனையுடன் தெரிவித்தார். மேலும் தனக்கு இந்த விஷயம் எனக்கு நீண்ட நாட்கள் தெரியாமல் இருந்தது என்றும்,  ஒரு கட்டத்தில் தெரியவந்த பிறகு நான் உடைந்து போனதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

தற்பொழுது கணவரை பிரிந்து தனது குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். சேர்ந்தும் வாழாமல், விவாகரத்தும் கொடுக்காமல் தன்னை பாடாய் படுத்துவதாக மனம் நொந்து பேட்டியளித்துள்ளார் நடிகை சம்யுக்தா சண்முகம்.  இதை அறிந்த ரசிகர்கள் உங்க வாழ்க்கையில இப்படி ஒரு சோகமா? என ஆறுதல் கூறி வருகின்றனர்.

Advertisement
Continue Reading
Advertisement