Uncategorized
கள்ளக்காதல் மோகம்… தன் மகளை திருமணம்’.. “செய்து வைத்த தாய்! ‘படுக்கையறையில் மகன்’.. ‘பார்த்த கொடுமை..! சிறுவனுக்கு” நேர்ந்த பரிதாபம்.?

கள்ளக்காதலுக்கு இடைஞ்சலாக இருந்த பெற்ற மகன் என்று கூட பார்க்காமல் கொலை செய்யப்பட்ட தாய் மற்றும் அவருடன் கள்ளக்காதலன் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
பாளையங்கோட்டை அருகே இருக்கும் களியக்காவிளையை அடுத்த மலையடி அல்ல சினாவிளையை பகுதியை சேர்ந்தவர் மோகன் மற்றும் வசந்தா தம்பதியினர் இவர்களுக்கு 2 மகள்களும், லால் மோகன் (13) என்ற ஒரு மகனும் உள்ளார். இதில் மனைவியின் நடத்தை சரியில்லாததால் கணவரான மோகன் மனைவி மற்றும் பிள்ளைகளை விட்டு பிரிந்து சென்று விட்டார். அதன் பின்னர் மகன் லால் மோகன் 2016-ம் ஆண்டு மர்மமான முறையில் இறந்த நிலையில். சிறுவன் தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலை செய்ததாக தாய் வசந்தா போலீசாரிடம் தகவல் தெரிவித்தார்.
இதனையடுத்து போலீசார் தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்தநிலையில், சந்தேகமடைந்த கணவர் மோகன், தனது மகன் சாவில் மர்மம் இருப்பதாக மனைவி வசந்தா மீது போலீசில் புகார் அளித்தார்.
அதன் பேரில் போலீசார் வசந்தாவை பிடித்து தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில், வசந்தாவும், அவரது கள்ளக்காதலன் சுபணன் (35) என்பவரும் சேர்ந்து சிறுவன் லால் மோகனை கொலை செய்தது தெரிய வந்தது. இதையடுத்து போலீசார் கள்ளக்காதல் ஜோடியை கைது செய்தனர்.
போலீசாரிடம் வசந்தா கூறிய வாக்கு மூலம் :
எனக்கும், அதே பகுதியை சேர்ந்த சுபணன் என்பவருக்கும் நீண்ட நாட்களாக கள்ளதொடர்ப்பு இருந்துவந்தது. இதை அறிந்த கணவன் மோகன் என்னை விட்டு பிரிந்து சென்றார். அதன்பின்பு, நாங்கள் யாருடைய தொந்தரவும் இல்லாமல் சந்தோஷமாக இருந்தோம்.
கடந்த 2016-ம் ஆண்டு நானும், சுபணனும் வீட்டில் தனிமையில் இருக்கும் போது மகன் லால் மோகன் பார்த்து விட்டான். இந்த சம்பவத்தை அவன் வெளியே சொன்னால் என்னாகுமோ என்று நினைத்து.
பெற்ற பிள்ளை என்றும் பாராமல் வாயில் தூக்க மாத்திரையை திணித்து விழுங்க வைத்தோம். தொடர்ந்து, நாயை கட்டி போடும் சங்கிலியால் நானும், சுபணனும் சேர்ந்து கழுத்தை நெரித்து கொன்றோம். தூக்க மாத்திரையை தின்று தற்கொலை செய்ததாக நாடகமாடினோம்.
எங்களின் மீது சந்தேகம் அடைந்த கணவர் மோகன், மகனின் சாவு குறித்து விசாரணை நடத்த பல இடங்களில் எங்களுக்கு எதிராக மனு அளித்து வந்தார். அவர் எங்களை மாட்டி விடுவாரோ என அச்சப்பட்டோம்.
எனது மகளை கள்ளக்காதலனுக்கு திருமணம் செய்து வைத்தால், மகளின் வாழ்க்கையை நினைத்தாவது சுபணன் மேல் நடவடிக்கையில் இறங்க மாட்டார் என நினைத்தேன். இதனால், எனது மூத்த மகளை சுபணனுக்கு திருமணம் செய்து வைத்தேன்.
ஆனால், போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி எங்களை அடையாளம் கண்டு கொண்டனர். இவ்வாறு அவர் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து கைது செய்யப்பட்ட வசந்தாவும், சுபணனும் குழித்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு பாளையங்கோட்டை ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
வசந்தாவின் கணவர் மோகன் ஆரம்பத்தில் குடும்பத்தை நல்ல முறையில்தான் பார்த்து வந்தார். பின்னர் வசந்தாவின் தகாத பழக்கத்தால் அவர்கள் இடையே பிரிவு ஏற்பட்டது.
இதனையடுத்து கள்ளக்காதலால் ஒரு குடும்பம் உருகுலைந்த சின்ன பின்னமான சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.