CRIME
அடச்சீ நீயெல்லாம் மனுஷியா.. சிசிடிவியை அணைத்துவிட்டு கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி செய்த பகீர் காரியம்.. மகனுக்கும் கணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. குலை நடுங்க வைக்கும் பின்னணி..!!
பெங்களூரு சிகபனவாறா பகுதியில் கணவன் மற்றும் அவரது 4 வயதுச் சிறுவன் கொல்லப்பட்ட வழக்கில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வெளியாகியுள்ளன. 34 வயதான அபிநந்தனுக்கும் அவரது மனைவி ஹரிசிக்கும் இடையே நீண்ட நாட்களாகத் தகராறு நிலவி வந்த நிலையில், சம்பவத்தன்று இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தக் கொலையின் பின்னணியில் ஹரிசியின் காதலன் வினய் இருக்கலா எனச் சந்தேகப்படும் காவல்துறையினர், மனைவியே தன் காதலனுடன் சேர்ந்து இந்தத் திட்டத்தைத் தீட்டியிருக்கலாம் என்ற கோணத்தில் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சம்பவத்தன்று இரவில் கணவருடன் தகராறு செய்ததைத் தொடர்ந்து, ஹரிசி தனது காதலியை வீட்டிற்கு வரவழைத்து இக்கொடூர அரங்கேற்றத்திற்குத் துணைபோயுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும், ஆதாரங்களை அழிப்பதற்காக வீட்டின் சிசிடிவி கேமராக்களை அணைத்துவிட்டு தப்பியோட முயன்றதும் தெரியவந்துள்ளது. சொத்துத் தகராறு மற்றும் கள்ளத்தொடர்பு ஆகிய இரண்டு கோணங்களிலும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ள நிலையில், முழுமையான உண்மை காவல்துறையின் சட்டப்பூர்வ விசாரணையில்தான் உறுதியாகும்.
