LATEST NEWS
” அன்று கார் இல்லாததால் காதல் தோல்வி” ஆனா இன்று கார் கொடுத்துட்டாரு எங்க தலைவரு… பேரவையில் தவெக எம்.எல்.ஏ சொன்ன ஃப்ளாஷ்பேக்.. முதல்வர் விஜய் கொடுத்த ரியாக்ஷன்…!!
சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் அரசு சார்பில் கார் வழங்கப்படும் என முதலமைச்சர் விஜய் அறிவித்ததற்கு, பெரியகுளம் தொகுதி தவெக எம்.எல்.ஏ சபரி அயங்கரன் பேரவையில் தனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்த அறிவிப்பைப் பாராட்டிப் பேசிய அவர், தனது பழைய நினைவுகளையும் தற்போதைய சூழலையும் ஒப்பிட்டு அவையில் உருக்கமாகப் பேசினார். தலைமைச் செயலகத்திற்குத் தான் இதுவரை ரயில் மற்றும் ஆட்டோ மூலமாகவே வந்து சென்றதாகவும், மக்கள் பிரதிநிதியாகத் தான் பட்ட அந்தச் சிரமத்தை முதலமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பு தற்போது போக்கியுள்ளது என்றும் அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து பேசிய எம்.எல்.ஏ சபரி அயங்கரன், தனது கல்லூரி வாழ்க்கையில் நடந்த சுவாரசியமான காதல் தோல்விச் சம்பவம் ஒன்றை அவையில் பகிர்ந்து கொண்டு அனைவரையும் சிரிக்க வைத்தார். கல்லூரி படிக்கும் காலத்தில் தனக்கு நல்ல வேலையும், சொந்தமாகக் காரும் இல்லாத ஒரே காரணத்தால்தான் தனது காதல் தோல்வியில் முடிவடைந்ததாகக் குறிப்பிட்ட அவர், இன்று தனது அரசியல் வழிகாட்டியான தவெக தலைவர் விஜய் தனக்குத் தொகுதி மக்களுக்காகச் சேவை செய்ய நல்ல வேலையையும் (எம்.எல்.ஏ பதவி), தற்போது பயணிப்பதற்கு ஒரு காரையும் வழங்கியுள்ளார் என நகைச்சுவையாகத் தெரிவித்தார்.
அரசியல் மேடைகளில் மட்டுமே வழக்கமாகப் பேசப்படும் இத்தகைய தனிப்பட்ட சுவாரசியக் கதைகளை, சட்டமன்றப் பேரவையிலேயே தவெக எம்.எல்.ஏ சபரி அயங்கரன் மிக எதார்த்தமாகவும் நகைச்சுவையாகவும் பேசியது அங்கிருந்த பிற உறுப்பினர்களிடையே பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தியது. முதலமைச்சரின் இந்த புதிய கார் அறிவிப்பு ஆளுங்கட்சி மட்டுமின்றி அனைத்து தரப்பு இளம் மற்றும் நடுத்தரப் பின்புலம் கொண்ட எம்.எல்.ஏ-க்களுக்கும் மிகப்பெரிய அளவில் உதவியாக இருக்கும் என்பதை அவரது இந்தப் பேச்சு வெளிப்படுத்தியுள்ளது.
