CRIME
15 வயது சொந்த மகளையே சீரழித்த 51 வயது தந்தை… தூங்கும்போது நடந்த பகீர் சம்பவம்..!!
சிங்கப்பூரில் 51 வயதான தந்தை ஒருவர், தனது 15 வயது சொந்த மகளை பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றத்திற்காகக் காவல் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். குடும்ப உறவுகளையே உலுக்கும் வகையில் அமைந்துள்ள இந்தச் சம்பவம், அங்குள்ள உள்ளூர் மக்களிடையே கடும் அதிர்ச்சியையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தன்று, வீடு மிகவும் அலங்கோலமாகத் தூய்மையற்றுக் கிடந்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பாகத் தந்தைக்கும் மகளுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இந்தத் தகராறு ஓய்ந்த பின்னர், அந்தச் சிறுமி தனது அறைக்குச் சென்று தூங்கியுள்ளார். அப்போது, அங்கு வந்த தந்தை தூங்கிக் கொண்டிருந்த தனது மகளைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தியுள்ளார்.
தந்தையின் இந்த அத்துமீறலால் கடும் பயமடைந்த சிறுமி, அந்த நேரத்தில் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்துள்ளார். பின்னர் தந்தை குளிக்கச் சென்ற அந்தச் சாதகமான நொடிகளைப் பயன்படுத்தி, வீட்டை விட்டு வெளியேறி உடனடியாகக் காவல் நிலையம் சென்று புகார் அளித்துள்ளார். சிறுமியின் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்துள்ள நீதிமன்றம், தந்தை மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் அவருக்கு 13 முதல் 14 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவித்துள்ளது.
