LATEST NEWS
“காகத்த எதுக்குடா பிடிச்ச… நான் தான் பிடிச்சேன்… சமைச்சு சாப்பிடப் போறேன்..! என மீட்பாளர்களிடம் அசால்ட்டாகப் பதிலளித்துச் சண்டையிட்ட போதை ஆசாமி..! வைரலாகும் ஷாக்கிங் வீடியோ..!!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் விலங்கு வதைத் தொடர்பான அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அங்கு அளவுக்கு அதிகமாக மது அருந்திய நபர் ஒருவர், காகம் ஒன்றை உயிருடன் பிடித்துத் தனது மிதிவண்டியின் கேரியரில் கட்டிக்கொண்டு சென்றுள்ளார். ‘savespeechlessorg’ என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோ மற்றும் பதிவின் மூலம் இச்சம்பவம் வைரலானது. மிதிவண்டியில் காகத்தைக் கொண்டு செல்லும் வழியிலேயே, அந்த நபர் அதன் இறகுகளைப் பிடுங்கிக் கொண்டிருந்ததாக அந்த சமூக வலைதளப் பதிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அந்த நபர் அதிக போதையில் சரியாக நடக்கக்கூட முடியாமல் தள்ளாடியபடி சென்றுள்ளார். அதைக் கண்ட விலங்கு மீட்பாளர்கள் அவரைத் தடுத்து நிறுத்தி, காகத்தை எங்கு கொண்டு செல்கிறாய் என்று கோபத்துடன் விசாரித்துள்ளனர். அதற்கு அந்த நபர், “நான் தான் இதைப் பிடித்தேன், இதைச் சாப்பிடப் போகிறேன்” என்று பதிலளித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த மீட்பாளர்கள் உடனடியாகத் தலையிட்டு பறவையை மீட்க முயன்றனர். அவரைப் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதாகக் கூறியபோது, அந்த நபர் மீட்பாளர்களைத் திட்டி, காகத்தை மீண்டும் பறிக்க முயற்சி செய்துள்ளார்.
https://www.instagram.com/reel/Db7yQNTu0qa/?utm_source=ig_embed&ig_rid=AQL1KkGKu3g3lQxLgqTiqAc
அந்த நபரின் எதிர்ப்பையும் மீறி, மீட்பாளர்கள் காகத்தை அவரிடமிருந்து பாதுகாப்பாக மீட்டு, அவரை அங்கிருந்து அனுப்பி வைத்தனர். தற்போது அந்தக் காகம் மீட்பாளர்களின் பராமரிப்பில் பாதுகாப்பாக உள்ளது என்றும், அது முழுமையாகக் குணமடைந்த பிறகு பாதுகாப்பான இடத்தில் பறக்கவிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விலங்குகள் மீதான இத்தகைய கொடூரம் குறித்து இணையத்தில் கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ள நிலையில், சமூக வலைதளப் பதிவில் கூறப்பட்டுள்ள இத்தகவல்கள் குறித்து இன்னமும் சுயாதீனமாக உறுதி செய்யப்படவில்லை.
