TRENDING
பிரியங்கா மட்டுமில்லை… அன்றைய தினம்! ரோஜா உட்பட 3 பெண்கள் என கலங்கும் இந்தியர்கள்?… இந்தியா இனி பெண்களுக்கு பாதுகாப்பான நாடு அல்ல ?…..
ஒரே நாளில் 3 இளம் பெண்கள் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளது. இந்தியாவில் பிரியங்கா என்ற பெண் மருத்துவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்வலையை ஏற்படுத்திய நிலையில், அன்றைய தினம் இதே போன்று மூன்று பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளது வேதனையாக இருப்பதாக இணையவாசிகள் குறிப்பிட்டு வருகின்றனர்.
ஹைதராபாத்தை சேர்ந்த 27 வயது மதிக்கத்தக்க பெண் மருத்துவர் பிரியங்கா ரெட்டி கொல்லப்பட்ட சம்பவத்தில், லாரி டிரைவர், கிளீனர் என நான்கு பேரை பொலிசார் கைது செய்துள்ளனர். அதுமட்டுமின்றி எந்த ஒரு பிரச்னையோ, பயமோ இருந்தால் உடனடியாக பொலிசாருக்கு தகவல் கொடுங்கள், அதன் பின் பெற்றோருக்கு தகவல் கொடுங்கள் என்று தெலுங்கானா பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதுபோன்ற கொடூரமான, தூண்டப்படாத வன்முறையை என்ன சொல்வது? இது கற்பனையிலும் நினைத்த பார்க்க முடியாத ஒன்று, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு பிரார்த்தனைகளும் மிகுந்த வருத்ததையும் தெரிவித்து கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.இந்நிலையில் சமூகவலைத்தளங்களில் தனியாக நின்று உதவி கேட்ட பெண்ணிற்கு இப்படி ஒரு நிலையா? நாம் எந்த நாட்டில் இருக்கிறோம்? பெண்கள் முன்னேற்றம், பெண்கள் பாதுகாப்பு போன்றவைகளை பற்றி பேசுகிறோம், ஆனால் அந்த பெண்களுக்கு இந்தியாவில் என்ன நடக்கிறது…
பிரியங்கா இறந்த தினம் அன்று அவர் மட்டுமில்லை, அன்றைய தினம் இந்தியாவில் அவரையும் சேர்த்து பெண்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்குள்ளாகியுள்ளனர். அதில் தமிழகத்தின் காஞ்சிரபுத்தை சேர்ந்த ரோஜா என்ற பெண் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.அதே போன்று ராஞ்சியில் 25 வயது கல்லூரி மாணவி ஒருவர் 12 பேர் கொண்ட கும்பலால் பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டு கொல்லப்பட்டார். சண்டிகரில் ஒரு பெண், ஆட்டோ டிரைவால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது என்று இணையவாசிகள் அவர்களின் புகைப்படங்களை பதிவிட்டு கண்ணீர் விடுகின்றனர்.