LATEST NEWS
திடீர் டுவிஸ்ட்….! திருச்சி கிழக்கில் களம் காண்கிறாரா மு.க ஸ்டாலின்…? செய்தியாளர்களிடம் சொன்ன பதில்…. பரபரப்பில் அரசியல் களம்…!!
சமீபத்தில் நடைபெற்ற தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்த முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலினை, வரவிருக்கும் இடைத்தேர்தலில் களம் இறக்க அக்கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தில் விரைவில் காலியாக உள்ள ஆறு தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட உள்ள நிலையில், குறிப்பாகத் திருச்சி கிழக்கு தொகுதியில் அவரைப் போட்டியிட வைக்க அக்கட்சியினர் கள நிலவரங்களை ஆராய்ந்து வருகின்றனர். இந்தத் தொகுதி, தற்போதைய முதலமைச்சர் விஜய் போட்டியிட்டு வெற்றி பெற்று, பின்னர் பெரம்பூர் தொகுதியைத் தக்கவைத்துக் கொள்வதற்காகத் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்த இடமாகும் என்பதால் அரசியல் ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
முதலமைச்சர் விஜய் ராஜினாமா செய்த இந்தத் திருச்சி கிழக்கு தொகுதியில் தி.மு.க. சார்பில் மு.க.ஸ்டாலினைக் களம் இறக்கிப் பெரும் வெற்றி பெறச் செய்ய வேண்டும் என்பது உடன்பிறப்புகளின் நீண்ட நாள் விருப்பமாக உள்ளது. இந்தச் சூழ்நிலையில், சென்னை அண்ணா அறிவாலயத்திற்கு வந்துவிட்டுத் தனது இல்லத்திற்குத் திரும்பிய மு.க.ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் இது குறித்துக் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர் அடியோடு மறுப்புத் தெரிவிக்காமல், “இது குறித்து இன்னும் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை” என்று சூசகமாகப் பதிலளித்தார். அவரது இந்த மழுப்பலான பதில், அவர் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவதை மறைமுகமாக உறுதிப்படுத்துவது போல் அமைந்துள்ளதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் தற்போதே பெரும் பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது.
