LATEST NEWS
நெஞ்சை உலுக்கும் வைரல் வீடியோ..! “என்னை விட்டுடுங்க” கதறிய நோயாளி… நெஞ்சிலேயே உதைத்த பெண் ஊழியர்..! ! மருத்துவமனை வளாகத்தில் நடந்த மனிதாபிமானமற்ற வன்கொடுமை..!!!
உத்தரப் பிரதேசத்தின் ரேபரேலி மாவட்ட அரசு மருத்துவமனை வளாகத்தில் இந்த கொடூரமான சம்பவம் நடந்துள்ளது. அங்குள்ள பெண் ஊழியர் ஒருவர், தரையில் அமர்ந்திருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர் ஒருவரை மருத்துவமனையை விட்டு வெளியேறுமாறு கூறி, அவரது நெஞ்சிலும் உடலிலும் கால்களால் கொடூரமாக எட்டி உதைக்கும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. அந்த நபர் வலியால் கத்தியபோதும், அங்கிருந்த மற்றவர்கள் அதைத் தடுக்காமல் வேடிக்கை பார்த்தது பொதுமக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த அதிர்ச்சி வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானதை அடுத்து, மருத்துவமனை நிர்வாகம் மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை உடனடியாகச் செயல்பட்டது. முதற்கட்ட விசாரணையில் அந்த பெண் ஊழியர் மருத்துவமனையில் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிந்து வந்தவர் என்பது கண்டறியப்பட்டது. நோயாளிகளிடமும் பொதுமக்களிடமும் இத்தகைய அநாகரிகமான மற்றும் வன்முறையான முறையில் நடந்துகொண்டதற்காக, அந்தப் பெண் ஊழியர் உடனடியாகப் பணியில் இருந்து நீக்கப்பட்டார்.
https://twitter.com/i/status/2071810486065381379
அரசு மருத்துவமனைகளில் சிகிச்சைக்காகவும் புகலிடத்திற்காகவும் வரும் ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட மனிதர்களிடம் மருத்துவப் பணியாளர்கள் காட்டும் இத்தகைய அநாகரிகமான மனிதநேயமற்ற செயல் நாடு முழுவதும் பலத்த கண்டனத்திற்கு உள்ளாகியுள்ளது. இதுபோன்ற அரசு நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்களுக்கு மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களைக் கையாள்வது குறித்து முறையான பயிற்சியும், மனிதநேய விழிப்புணர்வும் வழங்கப்பட வேண்டும் எனச் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
