LATEST NEWS
ஸ்டாலினைப் பார்த்தால் கோபம் வரல… பரிதாபமாகத்தான் இருக்கு… அவரை சுத்தி இருக்கும் அந்த 4 பேர் ஏமாத்துறாங்க.. போட்டுடைத்த அமைச்சர் அருண்ராஜ்….!!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மற்றும் அக் கட்சியின் செயல்பாடுகள் குறித்து தவெக அமைச்சர் அருண்ராஜ் கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர்கள் தவெக-வில் இணையும் விழாவில் பேசிய அவர், “வாழும் எம்ஜிஆர்” ஆன முதலமைச்சர் விஜய் தலைமையிலான கட்சியில் தான் அதிமுகவினர் இணைந்துள்ளதாகவும், இங்கு கூடியுள்ள கூட்டம் காசு கொடுத்து சேர்க்கப்பட்டது அல்ல என்றும் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், திமுகவுடன் இணைய அதிமுக முயன்றதே மக்களுக்குச் செய்த துரோகம் என்றும், தற்போது தேர்தல் நடத்தினால் தவெக 60% வாக்குகளைப் பெறும் என்றும் அவர் தெரிவித்தார்.
சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் எழுப்பிய கேள்விகள் மற்றும் கட்சி நிதி (Party Fund) விவகாரம் குறித்தும் அமைச்சர் அருண்ராஜ் காரசாரமாகப் பேசினார். “நாங்கள் கட்சி நிதி வாங்குவதில்லை என்று திமுகவால் தைரியமாக மக்கள் முன்னிலையில் கூற முடியுமா?” என்று சவால் விடுத்த அவர், முதலமைச்சர் விஜய் யாரையும் ஊழல் செய்ய விடமாட்டார் என்று உறுதிபடக் கூறினார். திமுக கட்சி நிதி வாங்குவதற்கான ஆதாரங்கள் ஊடகங்களுக்கும் பொதுமக்களுக்கும் நன்றாகத் தெரியும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தற்போதைய அரசியல் நிலைப்பாடு குறித்துப் பேசிய அவர், ஸ்டாலினைப் பார்த்தால் தமக்குக் கோபம் வரவில்லை, பரிதாபமாகத்தான் இருக்கிறது என்று குறிப்பிட்டார். ஸ்டாலின் ஆட்சியில் இருந்தபோதும் அவரைச் சுற்றியிருந்த நான்கு பேர் ஏமாற்றிக் கொண்டே இருந்தார்கள் என்றும், தற்போதும் அதே நபர்கள் தவெக மீது மக்கள் அதிருப்தியில் இருப்பதாக அவரை நம்ப வைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் விமர்சித்தார். இன்னும் 3 மாதங்களில் தவெக ஆட்சி கவிழும் என்று ஸ்டாலின் கூறுவது வெறும் பகல்கனவு என்றும் அவர் சாடினார்.
