LATEST NEWS
Breaking: கரூர் துயர சம்பவத்தில் இறந்த 41 பேரின் வாரிசுதரர்களுக்கு அரசு பணி…? தமிழக அரசு திட்டம்..!!!
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் நடைபெற்ற விஜய்யின் அரசியல் பிரச்சாரத்தின் போது எதிர்பாராத விதமாகப் பயங்கர கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த துரதிர்ஷ்டவசமான நெரிசலில் சிக்கி 41 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்தில் உயிரிழந்த 41 பேரின் குடும்பங்களுக்கு உதவும் வகையில், அவர்களது குடும்பத்தில் தலா ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதற்கான அரசாணை தயார் செய்யப்பட்டுள்ளது. இதற்கான பணி நியமன ஆணையை வரும் 10-ஆம் தேதி தமிழக முதல்வர் விஜய் வழங்க உள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
பயனாளிகளின் கல்வித் தகுதிக்கு ஏற்ப வருவாய்த்துறை, பள்ளிக்கல்வித்துறை மற்றும் கூட்டுறவுத்துறை போன்ற அரசுத் துறைகளில் இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் ஒதுக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
